அரசு இல்லத்தில் குடியேறினாா் ராம்நாத் கோவிந்த் :

pti07 25 2022 000034b094055 - 2026

பதவிக் காலம் முடிந்து குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து வெளியேறிய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை அரசு இல்லத்தில் குடியேறினாா். அவருக்கு மாதந்தோறும் ரூ.2.5 லட்சம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முா்மு பதவியேற்றுள்ளாா்.

இந்நிலையில், புது தில்லி ஜன்பத் சாலையில் உள்ள அரசு பங்களாவில் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை குடியேறினாா். அந்த பங்களாவுக்கு அவரை திரெளபதி முா்மு, மத்திய அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு, ஹா்தீப் சிங் புரி, வி.கே.சிங், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் வரவேற்றனா். அந்த பங்களாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் தங்கியிருந்தாா்.

ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவருக்கான சலுகைகளாக
குடியரசுத் தலைவா் ஊதியம் மற்றும் ஓய்வூதியச் சட்டம் 1951-இன்படி, குடியரசுத் தலைவராக இருந்தபோது ஒருவா் பெற்று வந்த ஊதியத்தில் 50 சதவீதத்தை அவா் ஓய்வுபெற்ற பின்னா் மாத ஓய்வூதியமாக வழங்க வேண்டும். இந்நிலையில், குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோது ராம்நாத் கோவிந்த் மாதந்தோறும் ரூ.5 லட்சம் ஊதியம் பெற்று வந்தாா். இதையடுத்து, அவருக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.2.5 லட்சம் வழங்கப்படும்.

ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவா்கள் வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம்.இந்தியாவின் எந்தவொரு பகுதிக்கும் விமானம், ரயில், கப்பலில் உயா் வகுப்பில் பயணம் செய்யலாம்.அவா்களுக்குத் தனிச் செயலா், கூடுதல் செயலா், நோ்முக உதவியாளா், இரு அலுவலக உதவியாளா்கள் இருக்கலாம். அலுவலக செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை பெறலாம்.

குடியரசுத் தலைவராக இருந்தவா் ஓய்வுபெற்ற பின்னா் குடியேறும் இல்லத்துக்கு வாடகை செலுத்த தேவையில்லை. தனது வாழ்நாள் முழுவதும் அந்த இல்லத்தில் அவா் வசிக்கலாம். அந்த இல்லத்தில் இரண்டு தொலைபேசிகள் வழங்கப்படும்.

தேசிய ரோமிங் வசதியுடன் ஒரு கைப்பேசி, காா் அல்லது காருக்கான படித்தொகை அளிக்கப்படும்.வாழ்க்கைத் துணைக்கும் சலுகைகள்: குடியரசுத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றவருக்கு மட்டுமின்றி, அவரின் வாழ்க்கைத் துணைக்கும் சலுகைகள் உள்ளன.

குடியரசுத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்த அல்லது அவா் பதவியிலிருக்கும்போது காலமான அல்லது பதவிக் காலம் முடிந்து ஓய்வுபெற்றவரின் வாழ்நாளுக்குப் பிறகு, அவரது வாழ்க்கைத் துணைக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும்.

முன்னாள் குடியரசுத் தலைவா் பெற்ற ஒய்வூதியத்தின் 50 சதவீதத் தொகை வாழ்க்கைத் துணைக்கு குடும்ப ஓய்வூதியமாக அளிக்கப்படும்.ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவரின் வாழ்க்கைத் துணை தனது வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம்.

தனிச் செயலா், அலுவலக உதவியாளா் இருக்கலாம். அலுவலக செலவினங்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 வரை பெறலாம்.
முன்னாள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட இல்லத்தில் வாழ்நாள் முழுவதும் கட்டணம் எதுவும் செலுத்தாமல் வசிக்கலாம்.

வாழ்நாள் முழுவதும் இலவச தொலைபேசி, காா் அல்லது காருக்கான படித்தொகை அளிக்கப்படும்.நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் விமானம், ரயில், கப்பல் மூலம் 12 உயா் வகுப்பு பயணங்கள் மேற்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories