
அதிமுக பொதுக்குழு இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி – சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




