December 5, 2025, 3:54 PM
27.9 C
Chennai

மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே மின் கட்டண உயர்வு -அர்ஜூன் சம்பத்..

மற்ற மாநிலங்களை விட மின் கட்டணம் குறைவு என மக்களை ஏமாற்ற வேண்டாம்- தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டணங்களை உயர்த்தியுள்ள அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளதாக இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் தின்டுக்கல்லில் அரசு வழங்கிய இலவச டி.வி., மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.

அதனை தலையில் சுமந்தவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த இந்து மக்கள் கட்சியினர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அதன் பின்னர் அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது,

தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டணங்களை உயர்த்தியுள்ள அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள மின்துறை அமைச்சர் குஜராத், ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் மின் கட்டணம் குறைவு என கூறுகிறார். இதைச் சொல்லி மக்களிடம் இருந்து தப்பித்து விட முடியாது.

கடந்த 16 மாதங்களில் தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து வருகிறது. மின் வாரியம் ஊழல் வாரியமாக மாறியுள்ளது. முதல்-அமைச்சர் மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளனர். இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் தி.மு.க. மீது அதிருப்தியில் உள்ள நிலையில் மக்களை திசை திருப்பும் முயற்சியில் இது போல் பேசியுள்ளார். கட்சியில் கனிமொழி எம்.பி. புறக்கணிக்கப்படுகிறார். முதல்-அமைச்சரின் மனைவி துர்கா, மருமகன் சபரீசன் ஆகியோரை மனதில் வைத்து ஆ.ராசா இவ்வாறு பேசி இருக்க கூடும். எனவே இந்த பேச்சுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர்தான் கோபமடைய வேண்டும். தி.மு.க.வில் 1 கோடி இந்துக்கள் உள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். அவ்வாறு உள்ள போது ஆ.ராசா பேசியது அவர்களை அவமதிப்பது போல் அமையும். எனவே அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1500x900 1763041 arujun - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories