மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே மின் கட்டண உயர்வு -அர்ஜூன் சம்பத்..

மற்ற மாநிலங்களை விட மின் கட்டணம் குறைவு என மக்களை ஏமாற்ற வேண்டாம்- தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டணங்களை உயர்த்தியுள்ள அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளதாக இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் தின்டுக்கல்லில் அரசு வழங்கிய இலவச டி.வி., மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.

அதனை தலையில் சுமந்தவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த இந்து மக்கள் கட்சியினர் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அதன் பின்னர் அக்கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது,

தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டணங்களை உயர்த்தியுள்ள அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள மின்துறை அமைச்சர் குஜராத், ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் மின் கட்டணம் குறைவு என கூறுகிறார். இதைச் சொல்லி மக்களிடம் இருந்து தப்பித்து விட முடியாது.

கடந்த 16 மாதங்களில் தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து வருகிறது. மின் வாரியம் ஊழல் வாரியமாக மாறியுள்ளது. முதல்-அமைச்சர் மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளனர். இதனை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவை கைது செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் தி.மு.க. மீது அதிருப்தியில் உள்ள நிலையில் மக்களை திசை திருப்பும் முயற்சியில் இது போல் பேசியுள்ளார். கட்சியில் கனிமொழி எம்.பி. புறக்கணிக்கப்படுகிறார். முதல்-அமைச்சரின் மனைவி துர்கா, மருமகன் சபரீசன் ஆகியோரை மனதில் வைத்து ஆ.ராசா இவ்வாறு பேசி இருக்க கூடும். எனவே இந்த பேச்சுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர்தான் கோபமடைய வேண்டும். தி.மு.க.வில் 1 கோடி இந்துக்கள் உள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். அவ்வாறு உள்ள போது ஆ.ராசா பேசியது அவர்களை அவமதிப்பது போல் அமையும். எனவே அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1500x900 1763041 arujun - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories