சங்கரன்கோவில்- தீண்டாமை ஒழிப்பு வழக்கில் கைதானவர்கள் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை..

500x300 1765222 sankarankoil - 2026

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை ஒழிப்பு வழக்கில் கைதான குற்றவாளிகள் 5 பேரும் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பள்ளி சிறுவர்கள் சிலர்‌ திண்பண்டம்‌ வாங்குவதற்காக அங்குள்ள பெட்டிக்‌ கடைக்கு சென்ற போது, அப்போது அந்த கடைக்காரர் , ‘ஊர்க்‌ கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் இனிமேல்‌ யாரும்‌ தின்பண்டம்‌ வாங்க வர கூடாது என்றும் இதை உங்கள்‌ வீட்டில்‌ போய்‌ சொல்லுங்கள்‌’ என்றும் கூறி அந்த சிறுவர்களை அனுப்பி விடுகிறார்.

இதனை அவரே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில்‌ வெளியிட்டதாகக்‌ கூறப்படுகிறது. இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டியிலினத்தை சேர்ந்த அந்த சிறுவர்களுக்கு திண்பண்டம் கொடுக்க மறுத்து தீண்டாமையும், சாதிய பாகுபாடு காட்டி, கடைக்காரர் ஊர் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக திருப்பி அனுப்பிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக இதுவரை 5 பேர்‌ மீது கரிவலம்வந்தநல்லூர்‌ போலீசார்‌ வழக்குப்‌ பதிவு செய்துள்ளனர். மேலும் கடை உரிமையாளர்‌ மகேஸ்வரன்‌ (40), ராமச்சந்திரன்‌ (22) ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த ஊரை சேர்ந்த குமார்‌, சுதா, முருகன்‌ ஆகிய மூவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சங்கரன்கோவில்‌ கோட்டாட்சியர்‌ சுப்புலெட்சுமி முன்னிலையில்‌ அக்கடைக்கு சீல்‌ வைக்கப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ கோட்டாட்சியர்‌ கந்தசாமி முன்னிலையில்‌ கடையில்‌ நோட்டீஸ்‌ ஒட்டப்பட்டது.

இந்தநிலையில், பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரத்தில் குற்றவாளிகள் மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் என 5 பேர் 6 மாதம் வரை கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார். ஊர் கட்டுப்பாடு என கூறி சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த சம்பவத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Topics

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories