சங்கரன்கோவில்- தீண்டாமை ஒழிப்பு வழக்கில் கைதானவர்கள் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை..

500x300 1765222 sankarankoil - 2026

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை ஒழிப்பு வழக்கில் கைதான குற்றவாளிகள் 5 பேரும் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு பள்ளி சிறுவர்கள் சிலர்‌ திண்பண்டம்‌ வாங்குவதற்காக அங்குள்ள பெட்டிக்‌ கடைக்கு சென்ற போது, அப்போது அந்த கடைக்காரர் , ‘ஊர்க்‌ கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் இனிமேல்‌ யாரும்‌ தின்பண்டம்‌ வாங்க வர கூடாது என்றும் இதை உங்கள்‌ வீட்டில்‌ போய்‌ சொல்லுங்கள்‌’ என்றும் கூறி அந்த சிறுவர்களை அனுப்பி விடுகிறார்.

இதனை அவரே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில்‌ வெளியிட்டதாகக்‌ கூறப்படுகிறது. இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பட்டியிலினத்தை சேர்ந்த அந்த சிறுவர்களுக்கு திண்பண்டம் கொடுக்க மறுத்து தீண்டாமையும், சாதிய பாகுபாடு காட்டி, கடைக்காரர் ஊர் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதாக திருப்பி அனுப்பிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக இதுவரை 5 பேர்‌ மீது கரிவலம்வந்தநல்லூர்‌ போலீசார்‌ வழக்குப்‌ பதிவு செய்துள்ளனர். மேலும் கடை உரிமையாளர்‌ மகேஸ்வரன்‌ (40), ராமச்சந்திரன்‌ (22) ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த ஊரை சேர்ந்த குமார்‌, சுதா, முருகன்‌ ஆகிய மூவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சங்கரன்கோவில்‌ கோட்டாட்சியர்‌ சுப்புலெட்சுமி முன்னிலையில்‌ அக்கடைக்கு சீல்‌ வைக்கப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ கோட்டாட்சியர்‌ கந்தசாமி முன்னிலையில்‌ கடையில்‌ நோட்டீஸ்‌ ஒட்டப்பட்டது.

இந்தநிலையில், பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரத்தில் குற்றவாளிகள் மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் என 5 பேர் 6 மாதம் வரை கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார். ஊர் கட்டுப்பாடு என கூறி சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த சம்பவத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories