திருப்பூர்- மில் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசிய மர்ம நபர்கள்..

500x300 1767168 homeddd - 2026

திருப்பூரில் பா.ஜ.க. பிரமுகர் வீடு என நினைத்து மில் உரிமையாளர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வீடு , அலுவலகங்களை குறிவைத்து மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசி வருகின்றனர்.

இதனை தடுக்க தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூரில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க வெளி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் திருப்பூரில் பா.ஜ.க. பிரமுகர் வீடு என நினைத்து பஞ்சு மில் உரிமையாளர் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு ஏ.வி.பி. லே அவுட் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் காங்கயத்தில் பஞ்சு மில் வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. கோட்ட பொறுப்பாளர் புதுக்கோட்டை பாலு என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். பின்னர் அவர் வீட்டை காலி செய்து சென்று விட்டார். அதன்பிறகு அந்த வீட்டில் லட்சுமணன் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்றிரவு அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அந்த வீட்டில் புதுக்கோட்டை பாலு குடியிருப்பதாக நினைத்து பாட்டிலில் அடைக்கப்பட்ட பெட்ரோல் குண்டை வீசி சென்று விட்டனர். பெட்ரோல் குண்டை பற்ற வைக்காமல் வீசியதால் பெரும் அசம்பாவிதம் நிகழவில்லை.

பாட்டில் உடைந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்து லட்சுமணன் வெளியே வந்தார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இது குறித்து லட்சுமணன் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமானது லட்சுமணன் மீதான தொழில் போட்டியில் வீசப்பட்டதா அல்லது பா.ஜ.க. அமைப்பு பொறுப்பாளர் வீடு மாறியது தெரியாமல் அவரை குறி வைத்து செய்யப்பட்ட தாக்குதல் சம்பவமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்த பகுதியில் பா.ஜ.க. சார்பில் ரத்ததான முகாம் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை தடுக்கும் வகையில் இந்த பெட்ரோல் குண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories