சபரிமலையில் பெண்கள் வழிபடு முறை- மாற்றம் கொண்டு வர தேவை இல்லை-சிபிஎம்- ஜி.சுதாகரன்..

screenshot17741 1659620912 - 2026

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபடும் முறையில் மாற்றம் கொண்டு வர தேவை இல்லை என மார்க்சிஸ்டு மூத்த நிர்வாகி ஜி.சுதாகரன் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்டு மூத்த நிர்வாகிகள் பலரும் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கருத்து தெரிவித்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட செல்லும் பெண்களின் குறைந்தபட்ச வயது 50-ல் இருந்து இன்னும் குறைக்கப்படவில்லை.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் (16-ந் தேதி) நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜைக்கான விழா தொடங்குகிறது. இந்த விழாவில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை செயல்படுத்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசு நடவடிக்கை எடுத்தது. இதனை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மார்க்சிஸ்டு மூத்த நிர்வாகிகள் பலரும் சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கருத்து தெரிவித்தனர். அப்போது மந்திரியாக இருந்த ஜி.சுதாகரனும் இந்த கருத்தை ஆதரித்து கருத்து கூறியிருந்தார்.

இந்த நிலையில் இப்போது மீண்டும் மண்டல பூஜை தொடங்க இருக்கும் நிலையில் மார்க்சிஸ்டு மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஜி.சுதாகரன், நிருபர்களிடம் கூறியதாவது:- சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட செல்லும் பெண்களின் குறைந்தபட்ச வயது 50-ல் இருந்து இன்னும் குறைக்கப்படவில்லை. சபரிமலை ஐயப்பன் நித்திய பிரமச்சாரி என கருதப்படுவதால் 50 வயதுக்கு குறைவான பெண்கள் இக்கோவிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறையை அனைவரும் மதித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். இதில் மாற்றம் கொண்டு வர தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார். மந்திரியாக இருந்தபோது இக்கருத்துக்கு எதிராக பேசிய ஜி.சுதாகரன் இப்போது அந்த கருத்தை மாற்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories