spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்தமிழக அரசால் பிரதமருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை; பாமரர் என்ன ஆவார்?: அண்ணாமலை கேள்வி

தமிழக அரசால் பிரதமருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை; பாமரர் என்ன ஆவார்?: அண்ணாமலை கேள்வி

- Advertisement -

தமிழக அரசால் நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால், பாமரர் நிலை என்ன ஆகுமோ என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பாஜக., மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை.

இன்று (29.11.2022) தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் குழு ஒன்று சந்தித்தது. அதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியவை:

‘இன்று மரியாதைக்குக்குரிய தமிழக ஆளுநர் திரு. ஆர் என் ரவி அவர்களைச் சந்தித்து இரண்டு விஷயங்களைக் குறித்துக் கோரிக்கை வைத்து விட்டு வந்தோம். அதில் மிக மிக முக்கியமானது ‘ கடந்த ஜூலை 29 ஆம் நாள் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தமிழகம் வநதார். அப்போது அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய தமிழக அரசு தனது ணியில் தவறியிருக்கிறது ‘என்ற குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக அளித்திருக்கிறோம்.

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகக் காவல் துறையினர் வைத்திருந்த பல ‘மெடல் டிடெக்டர்கள்’ ( Metal Detectors)பழுதடைந்திருந்தன. குறிப்பாக கையில் வைத்திருந்த மெடல் டிடெக்டர் , டோர் ப்ரேம் மெட்டல் டிடெக்டர்கள் ( Doorframe Metal Detectors) வேலை செய்யவில்லை.

பிரதமரின் பயணம் முடிந்தவுடன் மத்திய அரசின் சம்மந்தப்பட்ட அமைப்பு மாநில அரசுக்கு ‘ நாங்கள் மேற்கொண்ட பாதுகாப்பு ஆய்வின்போது நீங்கள் வைத்திருந்த பல மெடல் டிடெக்டர்கள் வேலை செய்யவில்லை .நீங்கள் உடனடியாக அதைக் கவனிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளனர்.,

பாரதப் பிரதமரின் பாதுகாப்பிலேயே இவ்வளவு குளறுபடிகள் இருந்தால் சாதாரணக் குடிமக்களுக்கு எவ்வாறு இவர்கள் பாதுகாப்பு அளிக்க முடியும்? தவறு இவர்கள் மீது தான் என்ற நிலையில் தமிழகக் காவல்துறையின் சில ஆய்வாளர்கள் ஒப்புக்குச் சப்பாணியாக ‘ இதற்குக் காரணம் நீங்கள்தான் ‘என்பது போன்ற பதிலைத் தயார் செய்துள்ளனர்.

அந்தக் கடிதத்தின் நகலும் எங்களிடம் உள்ளது. ஆகவே இந்தத் தவறுக்கு யாரெல்லாம் காரணமோ அவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

கோயில்கள் போன்ற தமிழகத்தின் பல பொது இடங்களில் பாதுகாப்பு தொடர்பான காவல்துறை உபகரணங்களான மெடல் டிடெக்டர்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதைக் கண்டறிய ஒரு சுதந்திரமான ஆய்விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மாண்புமிகு ஆளுநரிடம் நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

ஒருபக்கம் கோயம்புத்தூர் தற்கொலைப்படைத் தாக்குதல் முயற்சி, கள்ளக்குறிச்சி வன்முறை, பத்தொன்பது இடங்களில் பிஎப்ஐ வன்முறைகள் என்று நடந்து கொண்டிருக்கின்றன. மற்றொரு பக்கம் தமிழக அரசின் உள்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது.

இன்னொரு விஷயம் நமது பாரதப் பிரதமரின் கனவுத் திட்டமான ‘ஒவ்வொரு வீட்டுக்கும் குடி நீர் இணைப்பு’ வசதி. தமிழகத்தில் 69 லட்சம் வீடுகளுக்குக் குடி நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி 100% மத்திய அரசு வழங்குகிறது. மாநில அரசின் மூலமாக திட்டத்தை அமல்படுத்துகிறது.

ஆனால் சமீபகாலத்தில் திருநெல்வேலி , விழுப்புரம் போன்ற இடங்களில் நமது கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் சென்று பார்க்கும் போது ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் மக்கள் கூறியுள்ளனர். குறிப்பாக குழாய் மட்டும் போட்டிருக்கின்றனர். ஆனால் அடியில் கனெக்ஷனே இல்லை. அதில்தண்ணீரே வராது.

நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் ஆளும்கட்சியினர் ஊழல் செய்துள்ளார்.குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம்- அதில் குறிப்பாக இரண்டு பஞ்சாயத்துத் தொகுப்புகளில் எத்தனை வீடுகளுக்கு பாஜக வினர் சென்றனர், எவ்வளவு பேரிடம் பேசினர் , எத்தனை இடங்களில்வெளிக் குழாய் மட்டுமே வைக்கப்பட்டு கீழேகனெக்க்ஷன் தரப்படவில்லை, எவ்வாறு100 க்கு முப்பது இடங்களில் இம்மாதிரி செய்யப்பட்டுள்ளது , ஆனால் பணி நிறைவுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களைத் திரட்டியுள்ளோம். இதற்கான முழுப் பணத்தையும் மத்திய அரசிடமிருந்து வாங்கியுள்ளனர். இந்த விவரங்களையும் ஆளுநரிடம் அளித்துள்ளோம்.

இதையும் ஆய்வு செய்து இதில் சம்மந்தப்பட்டிருப்பவர்களைக் கண்டறிந்து அவரகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் மாநில அரசு மெத்தனமாக இருப்பதனால்தான் காவல் துறை மெத்தனமாக உள்ளது, என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

ஆன்லைன் ரம்மி குறித்த அனுமதியை ஆளுநர் தாமதப்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை…

ஆளுநர் இதற்கான அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளித்த பிறகும் தமிழக அரசு நடைமுறை ப்படுத்தவில்லை. உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் இவைகளின் சில கருத்துக்களை ஆளுநர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

ஆளுநர் அவர்கள் மாநில அரசிடம் சில விளக்கங்களைக் கேட்டுள்ளார். வலைத்தளவெளி (cyber space) தொடர்பான விஷயங்களைப்பொறுத்தவரை அது முழுமையாக மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் 31 ஆவதாக அது குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசுக்குஅது தொடர்பாக அதிகாரம் உள்ளதா என்று கேள்வி வருகிறது. இது வரை எந்த மாநிலமும் இந்த விவகாரம் தொடர்பாகத் தனது அதிகாரத்தை உபயோகிக்க முயலவில்லை. ஆகவே ஆளுநர் அவர்கள் தமிழிக அரசிடம் சில விளக்கங்களைக் கேட்டுள்ளார்.

எங்களது நிலைப்பாடு என்னவெனில் ‘ஆன்லைன் ரம்மி’ சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும், இதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படக் கூடாது ‘என்பதுதான். அதே நேரம் ஒரு சட்டம் என்பது சரியாக உள்ளதா? அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் சரியாக உள்ளதா?மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள சட்டமியற்றும் அதிகாரங்களுக்கு முரண்படாமல் உள்ளதா? என்று பார்க்க வேண்டிய கடமை ஆளுநருக்கு உள்ளது.’ தவறாக இயற்றப்பட்ட ஒரு சட்டம் இயற்றப்படாத சட்டத்துக்கு நிகரானது’ (A bad ly enacted law is as good as a law not enacted). என்பது நீதி பரிபாலன நடைமுறையின் அடிப்படைக் கோட்பாடாகும். ஆகவே ஆளுநரைப் பொத்தாம் பொதுவாகக் குறை சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது.

அவசரச் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்ட பிறகும் ஏன் மாநில அரசு அதை அமல் படுத்தவில்லை? என்பதற்கு சட்ட அமைச்சர் ரகுபதி அவர்கள் பதில் சொல்ல வேண்டும்… என்றார்.

பிரதமரின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அவருக்குத்தான் சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் (SPG) பாதுகாப்பு உள்ளதே? என்ற கேள்விக்கு பதிலளித்த போது…

எஸ்பிஜி யைப் பொறுத்தவரை அவர்கள் பிரதமரின் அணுக்கநிலைப் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் (close proximity).ஆனால் வெளிவட்டப் பாதுகாப்பு மாநில அரசின் பொறுப்பாகும்.

பிரதமரைப் பார்க்க வருபவர்கள் ஒரு குறிப்பிட்ட வழியாகச் சென்றால் அங்கு பாதுகாப்பை மாநிலக் காவல் துறை பார்த்துக் கொள்ள வேண்டும் அதைச் சரியாகச் செய்யவில்லை என்பதே நாம் வைக்கும் குற்றச்சாட்டு. கீழ் மட்டத்தில் உள்ள காவல்துறையினர் மிகக் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் அது களத்தில் பிரதிபலிப்பதில்லை. ஆனால் சில உயர் அதிகாரிகள் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்து வேலை செய்கின்றனர்.

குறிப்பாக உளவுத்துறை அதிகாரிகள் முதல் அமைச்சருக்கு மக்களிடம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளார். மக்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதில்லை. உதாரணத்துக்கு வேறு ஒரு மாநிலத்தில் கர்நாடகாவில் இதே போன்ற நிகழ்ச்சி நடந்தது. சில மணி நேரத்திலேயே இது பயங்கரவாதச் செயல், இது தொடர்பாக நாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். ‘என்றனர்.

ஆனால் இங்கு ஒரு பயங்கரவாதச் செயலைக் கூட அது பயங்கரவாதச் செயல் என்று ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். ஏனென்றால் ‘திமுக அரசு நம்மைப் பதவியிலிருந்து தூக்கி விடுவார்கள் ‘என்று அச்சப்படுகின்றனர். இந்த மாதிரி சூழ்நிலையில் காவல்துறை எப்படி செயல்பட முடியும்? – என்றார்.

ஆன்லைன் சூதாட்ட சட்டம் குறித்த விஷயத்தில் யார் மீது தவறு உள்ளது? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை,

மாநில அரசு எல்லாப் பழியையும் ஆளுநரின் மீது போட்டு தப்பிக்க முடியாது. ஆளுநர் கையெழுத்து போட பின்பும் ஏன் 6 மாத காலமாக அவசரச் சட்டத்தை அமல்படுத்தவில்லை? ஏன் காலவதி ஆக அனுமதித்தது? சட்ட ஷரத்து 32 ன் கீழ் எழுத்து பூர்வமாக ஆளுநர் கேட்டிருந்தால் மாநில அரசு ஏன் விஷயத்தை கவனிக்க அஞ்சுகிறது ? இதுவே ஆளுநர் கையெழுத்துப் போட்டு ‘இது ஏற்கெனெவே உயர் நீதி மன்றத்தில் தீர்ப்பு வந்துள்ளது என்று யாராவது நீதிமன்றத் தடை வாங்கினால் மாநில அரசு என்ன செய்யும்? ஆகவே ஆளுநர் கேட்ட விளக்கங்களை ஆக்க பூர்வமாக அணுகி , அவரது கேள்விகளுக்குப் பதிலளித்து அதில் உள்ள ஓட்டைகளை அடைத்து செயல்பட வேண்டும்.

நாட்டில் பல மாநிலங்களில் கடுமையான நிர்வாக முடிவுகளின் மூலம் ஆன்லைன் சூதாட்டத்து க்கெதிரான நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளன. தமிழ் நாட்டில் எவ்வளோ பேர் ‘நகல் செர்வர்'(proxy server) வைத்துள்ளனர். பிட் காயின் உள்ளது. மாநில அரசு சட்டம் போட்டாலும் அதை மீறி சூதாட்டம் ஆட முடியும்.வலைத்தளம் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய முடியும் ஆகவே எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? என்ற பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காணப்பட வேண்டும்..

ஆகவே பல சட்டப் பிரச்னைகள் உள்ளன.. இதையெல்லாம் ஆராயாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுநரைத் தொடர்ந்து விமரிசனம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளித்த ஆளுநர் இப்போது ஏன் அனுமதி வழங்கவில்லை? அவசரச் சட்டம் என்பது வேறு.அவசரமாகக் கொண்டு வரும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக அனுமதி வழங்குகிறார். ‘உடனடியாக எங்களுக்கு அனுமதி வழங்குங்கள். சட்ட சபை கூடி இது பிறகு விவாதிக்கப்படும். அதன் அடிப்படையில் சட்டம் இயற்றுகிறோம்.’ என்று கேட்பதனால்தான் அவசரத் சட்டத்துக்கு ஆளுநர் அனுமதி வழங்குகிறார்.ஆனால் ஆளுநர் அனுமதி வழங்கியும் ஏன் தமிழக அரசு அரசாணை வெளியிடவில்லை? – என்று கேள்வி எழுப்பினார்.

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு ராணுவ வீரர் விசிக வினரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து? கேட்டபோது,

நாட்டைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு துணைநிலை ராணுவ வீரரை ஆபாசமாக, மோசமாகப் பேசியுள்ளனர். ‘நீ எல்லையில் இருந்தாலும் உன் குடும்பம் இங்குதானே உள்ளது?’ என்பது போலெல்லாம் மிரட்டியுள்ளனர். மன அழுத்தம் உள்ள நிலையில் அவர் எவ்வாறு எல்லையில் பணி செய்வார்? தமிழக அரசு உடனடியாக அவருக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளது. அது பாராட்டுக்குரியது. ஆனால் இது மட்டும் போதாது. சம்மந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.எங்கள் கட்சியினர் உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்று எங்களது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளோம்… என்றார்.

‘ஆளுநர் பதவி காலாவதி ஆன ஒன்று’ என்று கனிமொழி கூறியுள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேட்டபோது,

இவரது சகோதர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டசபைக்குள் பிரச்சனை ஏற்பட்டு சட்டையைக் கிழித்துக் கொண்டு வந்தபோது முதலில் ஓடியது ஆளுனரிடம் தானே? அப்போது ஏன் கனிமொழி இதுபோல் பேசவில்லை? இவரது தந்தையார் கருணாநிதி அப்போது ஒரு ஆளுநரை ‘பஞ்சாபி சிங்கம்’ , ‘இவரைப் போன்ற ஆளுநர்தான் இந்தியாவுக்குத் தேவை ‘என்றெல்லாம் கூறினார்.

ஆகவே பழைய வரலாற்றைக் கனிமொழி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ‘நாங்கள் எந்த விதமான அடாவடியையும் செய்வோம், கேட்பதற்கு ஆட்களே இருக்கக் கூடாது’ என்றால் எப்படி?

இவர்கள் எதிர்க் கட்சியாக இருந்த போது அப்போதைய ஆட்சிக்கு எதிராக எத்தனை முறை ஆளுநரிடம் முறையிடச் சென்றனர்?கட்டுக் காட்டாக குற்றச் சாட்டுகள் அடங்கிய புகார்களைத் தூக்கிச் சென்றனர்? ஆகவே இப்போது மாற்றிப் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது… என்று கூறினார் அண்ணாமலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe