ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம் நாளை ஆரன்முளா கோயிலில் புறப்பாடு..

FB IMG 1671689726377 - 2026
images 23 2 - 2026

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம் நாளை 23-ந் தேதி ஆரன்முழா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்படுகிறது

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

இதற்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இம்முறை கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

குறிப்பாக வார இறுதி நாட்களில் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் தரிசனத்திற்கு வருகிறார்கள். இன்று கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் இன்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கோவிலுக்கு இருமுடி கட்டி வந்த பக்தர்கள் 18-ம் படி ஏற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த வரிசை கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டிருந்தது. இதுபோல நெய்யபிஷேகம் செய்யவும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

இம்முறை ஏராளமான கன்னிசாமிகளும் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் சரங்குத்தியில் திரண்டதால் அங்கும் கூட்டம் அலை மோதியது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

சபரிமலை ஐயப்பனுக்கு இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

அதன்பின்பு பகல் 11 மணிக்கு களபாபிஷேகத்திற்கு பிறகு தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் மண்டல பூஜை நடக்கிறது. இப்பூஜைக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன்பின்பு மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக சபரிமலை சன்னிதானம் எடுத்து செல்லப்படும். அலங்கரிக்கப்பட்ட சபரிமலை கோயில் போல் வடிவமைக்கப்பட்ட ரதத்தில் கொண்டு செல்லப்படும் தங்க அங்கி மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

இந்த ஊர்வலம் வருகிற 23-ந் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இந்த ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலம் 26-ந் தேதி பம்மை கணபதி கோவிலை வந்தடையும். பின்னர் அங்கிருந்து அன்று மாலை சன்னிதானம் கொண்டு செல்லப்படும். மறுநாள் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையின் போது தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

சபரிமலை ஐய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் 453 பவுன் எடையிலான தங்க அங்கி பத்தனம்திட்டை மாவட்டம், ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 27ஆம் தேதி சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற உள்ளதால் தங்க அங்கி , அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு வரப்பட உள்ளது. இந்த ஊர்வலம் நாளை காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆரன்முளா ஸ்ரீ பார்த்த சாரதி கோவிலில் இருந்து புறப்பட உள்ளது.

தங்க அங்கி ஊர்வலத்திற்கு இந்த ஆண்டு, வழி நெடுகிலும் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளிப்பார்கள்.

images 22 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories