பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதி இருவர் பலியான சம்பவம் வாகனம் பறிமுதல் டிரைவர் கைது..

IMG 20221231 WA0100 - 2026

சாத்தூர் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதி இருவர் பலியான சம்பவத்தில் தப்பி சென்ற வாகனத்தை பறிமுதல் செய்து ஒட்டுனரை இன்று சாத்தூர் தாலுகா போலீஸார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி(40),ஜெயராஜ்(35),சங்கரன்(45) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த புதன்கிழமை அதிகாலை திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர்.அப்போது புல்வாய்பட்டி சந்திப்பில் நான்குவழிச்சாலையில் திருநெல்வேலி நோக்கி சென்ற வாகனம் மோதி கருப்பசாமி,சங்கரன் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வந்தனர்.இந்நிலையில் விபத்து நடந்த தேசியநெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் ஆய்வு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் கரூரில் இயங்கிவரும் தனியார் கூரியர் நிறுவன வாகனம் என்பதும்,இந்த வாகனத்தை வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த முகேஸ்வரன்(26) என்பவர் வாகனத்தை ஒட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து கரூர் சென்ற தாலுகா போலீஸார் வாகனத்தின் முகப்பு விளக்கு மற்றும் முன்பக்க கண்ணாடி உடைந்திருந்ததை பார்த்து விபத்து ஏற்படுத்தியதை உறுதி செய்துள்ளனர்.மேலும் வாகன ஒட்டுனரான முகேஸ்வரனை சனிகிழமை கைது செய்ததுடன் வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories