IND Vs SL T20: இந்தியா அபார வெற்றி!

india vs srilanka

இந்தியா – இலங்கை மூன்றாவது டி20 ஆட்டம், ராஜ்கோட், 07.01.2023
இந்தியா அபார வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்


இந்தியா (5 விக்கெட்டுக்கு 228, சூர்யகுமார் 112*, கில் 46, மதுஷங்கா 2-55) இலங்கை அணியை (16.4 ஓவரில் 137 ஆல் அவுட், மெண்டிஸ் 23, அர்ஷ்தீப் 3-20, ஹர்திக் 2-30) 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதி 16 பந்துகளில் 35 ரன் (5 ஃபோர், 2 சிக்சர்) அடித்து ஐந்தாவது ஓவர் முடிவில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் ஆடவந்தார். இன்று அவர் டி20 இன்னிங்ஸில் அவரது மூன்றாவது சதத்தை அடித்தார். சூர்யகுமார் 51 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். அவரது ஆட்டத்தைக் காணக் கண் கோடி வேண்டும். குறிப்பாக அவுட்சைட் தி ஆஃப் ஸ்டெம்ப் வந்த பந்தினை விக்கட் கீப்பருக்குப் பின்னால் அவர் தூக்கி வீசிய ஒரு பந்து சிக்சருக்குப் போனது.

ஷுப்மன் கில் 14.4. ஓவரில் 46 ரன் அடித்து ஆட்டமிழந்தபோது அவர்கள் இருவரும் 113 ரன்கள் சேர்த்திருந்தனர். அதன் பின்னர் ஹார்திக் பாண்ட்யாவும் (4 ரன்) தீபக் ஹூடாவும் (4 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் அக்சர் படேல் ஆடவந்து 21 ரன் அடித்தார். இவ்வாறு இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 228 ரன் எடுத்திருந்தது. சூர்யகுமார் 112 ரன்னோடும் அக்சர் படேல் 21 ரன்னோடும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பதிலுக்கு இலங்கை ஆட வந்த இலங்கை வீரர்கள் தொடர்ந்து பவுண்டரிகளை அடித்தனர். பவர்ப்ளேயில் 51 ரன்கள்எடுத்தனர். ஆனால் இரண்டு விக்கட்டுகளை இழந்தனர். இருப்பினும் கேட்கும் ரன் விகிதம் மிக அதிகமாக இருந்தது, மேலும் அவர்கள் அடிக்கடி விக்கெட்டுகளை இழந்து தவித்தனர். எனவே 16.4 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தில் தோல்வியடைந்தனர்.

இந்த வெற்றியால் சொந்த மண்ணில் டி20ஐ இரு தரப்பு போட்டிகளில் தோல்வியடையாத இந்திய அணி இத்தொடருடன் 11 தொடர்களை வென்றுள்ளது. இதில் ஒரு தொடர் மட்டும் டிரா ஆனது. சூர்யகுமார் அனைத்து பந்து வீச்சாளர்களுக்கும் எதிராக எளிதாக பேட்டிங் செய்ததார். அவர் ஒன்பது சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகளை அடித்தார்: கிட்டத்தட்ட ஒவ்வொரு மூன்று பந்துகளுக்கும் ஒரு பவுண்டரி.

இந்திய அணி இந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவும் தொடர் நாயகனாக அக்சர் படேலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories