கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! மழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை ..

IMG 20230202 WA0043 - 2026


வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கை மட்டக்களப்பு – திரிகோணமலை இடையே கரையை கடந்தது.பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.மழையால் மூன்று மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.வேதாரண்யம் பகுதியில் நெல்‌வயல்கள் தண்ணீரில் மிதந்தது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து இலங்கை சென்றது.இதன் காரணமாக, சென்னை, கடலூர், நாகை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திருப்பூர், தேனி, தஞ்சை, உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ததாக என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை காரணமாக மயிலாடுதுறை நாகை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது வேதாரண்யம் பகுதியில் தொடர் மழையால் அறுபடைக்கு தயாராகி வரும் வயல்களில் நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மிதந்ததால்
விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வேதாரண்யம் பகுதியில் நெல் அறுவடை தருணத்தில் கொட்டித் தீர்க்கும் தொடர் கன மழையின் காரணமாக நெல் கதிர்கள் பல ஏக்கர் பரப்பளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.நாகை மாவட்ட பகுதியில் வங்கக் கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் மழைப் பெய்து வருகிறது.வடக்கு திசையில் இருந்து பலமான தரைக்காற்றும் வீசியது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

தொடர் கன மழை நீடிப்பதால் அறுவடை செய்யப்பட்டு வரும் சம்பா பருவ நெல் சாகுபடி வயல்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கச்செய்துள்ளது.
 நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் தொடரும் மழையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மழை தொடர்ந்தால் ஈடுசெய்ய முடியாத பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்திக்க நேரிடும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டு நகர்ந்ததால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

madurain.jpeg - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories