கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! மழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை ..

IMG 20230202 WA0043 - 2026


வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கை மட்டக்களப்பு – திரிகோணமலை இடையே கரையை கடந்தது.பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.மழையால் மூன்று மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.வேதாரண்யம் பகுதியில் நெல்‌வயல்கள் தண்ணீரில் மிதந்தது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து இலங்கை சென்றது.இதன் காரணமாக, சென்னை, கடலூர், நாகை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திருப்பூர், தேனி, தஞ்சை, உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ததாக என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை காரணமாக மயிலாடுதுறை நாகை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது வேதாரண்யம் பகுதியில் தொடர் மழையால் அறுபடைக்கு தயாராகி வரும் வயல்களில் நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மிதந்ததால்
விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வேதாரண்யம் பகுதியில் நெல் அறுவடை தருணத்தில் கொட்டித் தீர்க்கும் தொடர் கன மழையின் காரணமாக நெல் கதிர்கள் பல ஏக்கர் பரப்பளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.நாகை மாவட்ட பகுதியில் வங்கக் கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் மழைப் பெய்து வருகிறது.வடக்கு திசையில் இருந்து பலமான தரைக்காற்றும் வீசியது.

தொடர் கன மழை நீடிப்பதால் அறுவடை செய்யப்பட்டு வரும் சம்பா பருவ நெல் சாகுபடி வயல்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கச்செய்துள்ளது.
 நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் தொடரும் மழையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மழை தொடர்ந்தால் ஈடுசெய்ய முடியாத பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்திக்க நேரிடும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டு நகர்ந்ததால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

madurain.jpeg - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories