இன்று தை அஸ்தம் நட்சத்திரம்-சுவாமி கூரத்தாழ்வார் அவதாரம் தினம் ..

IMG 20230210 WA0040 - 2026

பகவத் ராமானுஜரின் சீடர்களில் முதன்மையானவர் கூரத்தாழ்வார். காஞ்சிபுரம் அருகேயுள்ள கூரம் என்ற கிராமத்தில் 1010-ம் ஆண்டு செளம்ய வருடம், தை மாதம், அஸ்தம் நட்சத்திரத்தன்று இவர் அவதரித்தார்.

இவரது பெற்றோர் கூரத்தாழ்வார் – பெருந்தேவி அம்மாள். இவரது இயற்பெயர் ஸ்ரீவத்ஸாங்கன். தாயார் சிறுவயதிலேயே காலமானார். எனினும் பெரும் செல்வந்தரான இவரது தந்தை மறுமணம் புரியாமல், இவரை கண்ணுங்கருத்துமாக வளர்த்தார்.

காஞ்சிபுரத்தில் தேவப்பெருமாளுக்கு கைங்கர்யம் செய்துவந்த திருக்கச்சிநம்பி, கூரத்தாழ்வானை வழிநடத்தி வந்தார். கூரத்தாழ்வானும், அவரது தேவியார் ஆண்டாளும் எந்நாளும் அடியார்கள் பசிபோக்கும் பணியைச் செய்து வந்தார்கள்.

ஒரு முறை சுவாமி கூரத்தாழ்வானின் அரண்மனைக் கதவுகள், இரவில் எந்நேரமானாலும் அடியார்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும்தான் காப்பிடப்படும்.

இதனை அறிவிக்கும் வகையில் மணியோசை எழுப்பப்படும். ஒருமுறை இந்த மணியோசையைக் கேட்டு காஞ்சிபுரம் கோயிலில் வீற்றிருக்கும் பெருந்தேவி தாயார், ‘இது என்ன ஓசை?’ என்று தேவப்பெருமாளிடம் கேட்டார். பெருமாளும், ‘இது கூரத்தாழ்வானின் அரண்மனை மணியோசை’ என்று பதிலளித்தார்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
images 2023 02 10T095411.523 - 2026

இந்த உரையாடலை திருக்கச்சிநம்பிகள் கேட்டார். மறுநாள் இதனை கூரத்தாழ்வானிடம் தெரிவித்தார். சகல லோகங்களுக்கும் அதிபதியான பெருமாளும், தாயாரும் வியக்கும் வகையில் நமது செல்வம் இருப்பதா? என்று எண்ணி அத்தனைச் செல்வங்களையும் கைவிட்டு, வெறுங்கையுடன் ஸ்ரீரங்கத்துக்கு தமது தேவியான ஆண்டாளுடன் புறப்பட்டார்.

நடுவழியில் பயந்தபடியே ஆண்டாள் வந்தார். ‘நமது கையில் ஏதுமில்லையே ஏன் பயம்?’ என்று கூரத்தாழ்வான் விசாரித்தார். ‘தாங்கள் உணவை வைத்து உண்ணும் தங்க வட்டிலை எடுத்து வந்தேன்’ என்றாள் ஆண்டாள். அதை வாங்கி தூர எறிந்துவிட்டு, இப்போது தைரியமாக வா!’ என்று நடந்தார் கூரத்தாழ்வான்.

வியாச பகவான் இயற்றிய பிரம்மசூத்திரத்துக்கு விசிஷ்டாத்வைத முறையில் பாஷ்யம் (விரிவுரை) இயற்ற பகவத் ராமானுஜர் முயன்றார்.

ஆனால் பிரம்மசூத்திரம் நூல் பாரதத்திலேயே இல்லை. எனினும் அதற்கு போதாயனர் எழுதிய விரிவுரை நூல் மட்டும் காஷ்மீர் தேசத்து அரசனிடம் இருந்தது.

IMG 20230210 WA0036 - 2026

அந்த நூலை வாங்கி வருவதற்காக பகவத் ராமானுஜரும், கூரத்தாழ்வானும் நடந்தே காஷ்மீர் சென்றனர். அந்நாட்டு மன்னனும் போதாயனரின் நூலை அளித்தான்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

திடீரென மறுநாள் அதனை திரும்ப வாங்கிக் கொண்டான். ராமானுஜர் மிகவும் வருந்தினார். அவருக்கு ஆறுதல் கூறிய கூரத்தாழ்வான், நேற்று இரவிலேயே அந்த நூலை முழுமையாகப் படித்து மனப்பாடம் செய்துவிட்டேன். அதனை இங்கேயே சொல்லவா? ஸ்ரீரங்கத்தில் வைத்து சொல்லவா? என்று கேட்டாராம்.

IMG 20230210 WA0037 - 2026

அந்தளவுக்கு கூரத்தாழ்வானின் ஞானம் அளவிடற்கரியது. பின்னர் இருவரும் ஸ்ரீரங்கம் வந்து, ராமானுஜர் சொல்லச் சொல்ல ஸ்ரீபாஷ்யத்தை கூரத்தாழ்வான் ஏடுபடுத்தினார் என்கிறது புராண வரலாறு.இன்று தை மாதம் அஸ்தம் நட்சத்திரம். சுவாமி கூரத்தாழ்வான் அவதாரம் தினம்.இன்று இவரை வணங்கினால் கண்நோய்குறைபாடு நீங்கி, கல்வியறிவு பெறலாம் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories