பொதுமக்கள் வங்கி கணக்கிலிருந்து ரூ.288 கோடி திருட்டு

Published:

images 59 1 - 2026
#image_title

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.288 கோடி பொதுமக்களின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தினந்தோறும் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ.50 கோடி திருடப்படுவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் குற்றத்தை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 2021ஆம் ஆண்டு சைபர் கிரைம் காவல் துறை தொடங்கப்பட்டதில் இருந்து. தொடர்ந்து பல்வேறு தடுப்பு பணிகளை ஈடுபட்டுக்கொண்டிருந்தது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ.288 கோடி நூதன முறையில் திருடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு வங்கி கணக்கில் திருடப்பட்டிருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார் சைபர் கிரைம் காவல் துறைக்கு வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் உடனடியாக நம்முடைய வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் 24 மணிநேரத்தில் உடனடியாக புகார் தெரிவித்தால் உடனடியாக சம்மந்தப்பட்ட வங்கியின் அதிகாரிகளிடம் பேசி பணத்தை மீட்கக்கூடிய பணிகளை தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வகையில் திருடப்பட்ட பணத்திலிருந்து ரூ.106 கோடி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில் ரூ.27 கோடி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

கடந்த 3 மாதத்தில் மட்டும் ரூ.67 கோடி திருடப்பட்டிருக்கிறது. இதில் ரூ.49 கோடி வங்கி மூலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரூ.6 கோடி பாதிக்கப்பட்டோருக்கு மீண்டும் காவல் துறை மூலமாக ஒப்படைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தடுக்க கூடிய பணிகளில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை சார்பாக 19000 தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக புகார்களையும் தெரிவிக்கலாம். போலியாக தொலைபேசி எண்ணையும் சிம் கார்ட் பயன்படுத்துகின்றனர்.

அது கிட்ட தட்ட 27,905 சிம் கார்ட் போலியாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டு இதனை முடக்கவேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு பரிந்துரையை செய்தனர். அந்த பரிந்துரையை ஏற்று ஒன்றிய அரசு 22240 சிம் கார்ட்களை முடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து குற்றத்தை தடுப்பதற்கான பணிகளை அதற்கான விழிப்புணர்வு செய்ய வகையில் காவல்துறையானது பணிகளை செய்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்து வருகின்றனர். ஏதேனும் குறைபாடுகள்,பணம் வங்கியில் தவறவிட்டாலோ, திருடப்பட்டாலோ உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உடனடியாக தெரிவித்தால் பணத்தை மீட்டு கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img