கடும் சேதமடைந்த திருச்செந்தூர் ரயில் வழித்தடம்!

nellai thiruchendur rail track - 2026
#image_title

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் பெரும் பாதிப்பு உள்ளான நிலையில், திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் வழித்தடம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

திருநெல்வேலி – திருச்செந்தூர் வழித்தடத்தில் ஸ்ரீவைகுண்டம் – செய்துங்கநல்லூர் இடையே தண்டவாளத்தில் அடிப்பகுதி முழுவதும் நீரில் அடிச்சென்று விட்டது. இந்த வழித்தடத்தில் பெரும்பாலான பகுதிகளில் மின்சார ரயில்வழித்தடம் பெரும் பாதிப்பு உள்ளாகியுள்ளது.

மின் எலக்ட்ரிக் போல் வயர்கள் பல இடங்களில் அறுந்து விழுந்து உள்ளது. இதனால் திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுபோல் திருநெல்வேலி – தென்காசி – செங்கோட்டை ரயில் வழித்தடத்திலும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், திருநெல்வேலி நகரில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் தண்டவாளங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பழைய பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பிற்பகுதியில் உள்ள பிரதான ஸ்வீட் ஸ்டால் ஹோட்டல்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

பஸ் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு பெய்த மழை தற்போது வரை இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். குழந்தைகள் வயதானவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவி வருவதால் சுகாதாரத்துறை முடுக்கி விடப் பட்டுள்ளது.

இந்த நிலையில் ஞாயிறு நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட அந்தியோதயா ரயில் திருச்சியிலும், மும்பை நாகர்கோவில் ரயில் திண்டுக்கல்லிலும், தாம்பரம் நாகர்கோவில் ரயில் கொடை ரோட்டிலும், பெங்களூர் நாகர்கோவில் மதுரையிலும், அனந்தபுரி ரயில் விருதுநகரிலும், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டியிலும் நிறுத்தப்பட்டு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது‌.

18-12-2023 இன்று காலை 20683 தாம்பரம் செங்கோட்டை ரயில் விருதுநகரில் இருந்து ரயில் மாற்று பாதையில் சிவகாசி – ராஜபாளையம் – சங்கரன்கோவில் – தென்காசி வழியாக இயக்கப்பட்டது.

திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிக அளவில் மழை பெய்தாலும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் ஓர் ஆண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் அதாவது நேற்று மட்டும் 96 செ.மீ பெய்துள்ளது.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories