December 5, 2025, 4:04 PM
27.9 C
Chennai

சிறுபான்மை தாஜா‌ அரசியல் தான் திராவிட மாடலா?

kadeswara subramaniam hindu munnani - 2025

மாவட்ட தலைநகரங்களில் கிறிஸ்தவ, முஸ்லீம்களுக்கு பிணம் புதைக்க இடம் – இந்துக்களை புறக்கணிக்கும் திமுக – சிறுபான்மை தாஜா‌ அரசியல் தான் திராவிட மாடலா? என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு சிறுபான்மையினரின் துதி பாடி அவர்களுக்கு மட்டுமான அரசாக அடையாளப்படுத்திக் கொள்வதிலேயே நாட்டம் உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய மதபோதகர்ளுடனும் தனியாக ஆலோசனை நடத்தி சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்களை வெளியிட்டுள்ளார்.

  1. மாநில அரசால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் மதசார்பு சிறுபான்மையினர் சான்றிதழ் இனி நிரந்தரமாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
  2. அரசு சாரா தொண்டு நிறுவனங்களை பதிவு செய்வதிலும் மானியம் பெறுவதிலும் நடைமுறைகள் தளர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
  3. ஐந்தாண்டுக்கு ஒருமுறை சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்களது உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். தற்போது தமிழக அரசின் இந்த அறிவிப்பால் இனி புதுப்பிக்க தேவையில்லை என அறிவிப்பு. அனால், ஒரு இந்து கல்வி நிறுவனம் பள்ளிக்கூடமோ, கல்லூரியோ தொடங்கினால் எத்தனை விதமான இடர்பாடுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. எவ்வளவோ அரசாங்க நடைமுறைகளை பின்பற்றி தான் பள்ளிகள் உருவாக்கப்படும். ஆனால் சிறுபான்மையினர் என்றால் கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது தமிழக அரசு.
  4. கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டங்கள் மற்றும் முஸ்லிம்களின் கபரஸ்தான் போன்றவற்றை விரிவுபடுத்துவதற்காக மாவட்ட தலைநகரங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளால் கட்டித் தரப்படும் என்று உறுதி.
  5. கல்லறைகளில் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் இன்னொரு உடலை புதைத்துக் கொள்ள விதிகள் தளர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
  6. இதில் சிறப்பாக, ஆழமாக ஆலோசித்து புதைக்கப்பட்ட சவப்பெட்டியில் 12 மாதங்களுக்கு பிறகு அதே குடும்பத்தை சேர்ந்தவர்களை புதைத்துக் கொள்ளலாம், உலோகத்தால் செய்யப்பட்டிருந்தால் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்களை புதைத்துக் கொள்ளலாம் என்று கிறிஸ்தவர்களை குதூகலப்படுத்தி இருக்கிறார்.

7) கோவில், தேவாலயம், மசூதி போன்ற இடங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்ற உறுதிமொழி கூறியுள்ளார். இத்தனை அறிவிப்புகளை வழங்கிய முதல்வர் கண்துடைப்புக்காகத் தான் கோவில் நிலம் மீட்பு என்று கூறியுள்ளதாக மக்கள் எண்ணுகின்றனர்.

மதசார்பற்ற அரசியல் செய்வவதாகக் கூறிக் கொள்ளும் முதல்வர் இந்துக்களின் சுடுகாடுகள் பராமரிப்பின்றி கிடக்கின்றன என்பது பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. பல சுடுகாடுகளில் அடிப்படை வசதிகளே இல்லை. சென்னை மற்றும் பிற முக்கிய மாவட்டங்களில் இந்துக்களின் சடலங்களை எரிப்பதோடு சரி. புதைப்பதற்கு அரசாங்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை.

இந்துக்கள் உயிரோடு இருந்தாலும் உரிமைகள் மறுக்கப்படுகிறது. இறந்த பின்பும் கூட அவர்களது உரிமைகள் பறிக்கப்படுகிறது. இந்துக்களின் கோவில்களை போன்று இந்துக்களின் சுடுகாடுகளும் அரசாங்கத்தின் பிடியில் சிக்கி சீரழிகிறது, கட்டண கொள்ளை நடக்கிறது.

சென்னை,கோவை, திருப்பூர், சேலம் உட்பட அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் உள்ள இந்து சுடுகாட்டு இடத்தில் இடித்து நவீன கழிப்பிடங்கள் கட்டப்படுகின்றன.

அதேபோல ஒரு இந்து உடலை புதைத்தால் பல்வேறு விதமான ஆவணங்களை வழங்கியும் கூட இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு பெரும்பாடு பட வேண்டி இருக்கின்றது. இப்படி பெரும்பான்மை இந்துக்கள் நசுக்கப்படுகிறார்கள் என்பது முதல்வருக்குத் தெரியாதா?

முஸ்லிம் கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டங்களுக்கும் கபர்ஸ்தானங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்பது இந்துக்களின் கேள்வியாக உள்ளது.

எத்தனையோ இடங்களில் மசூதி,சர்ச் போன்று கபர்ஸ்தான் மற்றும் கல்லறை தோட்டங்கள் சிறுபான்மையினரால் நடத்தப்படுகிறது. அங்கு பிணத்தை புதைப்பதற்கு கட்டணம் வசூலிக்க்கப்படுகிறது. அதில் வரும் வருமானத்தையும் அவர்களே பயன்படுத்துகின்றனர். இவ்வாறிருக்க அரசு பணத்தை அங்கு கொண்டு கொட்டுவது ஏன்?

மசூதி சர்ச் நிலங்களை ஆக்கிரமித்ததாக முதல்வர் கூறுவது அபத்தம். பல மாவட்டங்களில் இந்து சுடுகாடுகளையும் இந்து கோவில்களையும் கபரஸ்தானும், கல்லறைத் தோட்டங்களும் ஆக்கிரமித்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை அடுக்க முடியும்.

சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடும் இடுகாட்டில் அதிமுக; தி.மு.க போன்ற கட்சிகள் மாறி மாறி ஊழல் தாண்டவம் ஆடி வருகின்றன.

தமிழகத்தில் பல விவசாய நிலங்கள் கல்லறை தோட்டங்களாக மாறி இருப்பது கவலைக்குரியது. ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கள்ளிமந்தயம், கன்னிவாடி, அம்பிளிக்கை போன்ற பகுதிகளில் பல இந்துக்களின் விவசாய நிலங்கள் கல்லறை தோட்டங்களாக மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளுக்கு காரணம் யார்?

இந்த அறிவிப்புகளுக்கு அடிப்படைக் காரணம் இப்பொழுது திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளிடையே நடைபெறும் யார் சிறுபான்மையினரை தாஜா செய்வதில் சிறந்தவர், அவர்களின் வாக்கு வங்கியை யாருக்கு சாதகமாக்குவது என்ற போட்டிதான். சிறுபான்மை நலன் விஷயத்தில் திமுகவும் அதிமுகவும் சளைத்தவர்கள் இல்லை. போட்டி போட்டுக் கொண்டு சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாக தங்களை காண்பித்துக் கொள்கின்றனர்.

அதிமுக ஆட்சியில் எஸ் டி பி ஐ என்ற முஸ்லிம் அமைப்பின் மீது பல வழக்குகள் போடப்பட்டது. ஆனால் இப்பொழுது எஸ்டிபிஐயின் மாநில மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்து கொள்கிறார். அவர் கலந்து கொண்ட இரண்டாவது நாளே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சிறுபான்மையினர் நலனுக்காக கூட்டம் நடத்துகிறார்.

கருமத்தம்பட்டியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இதையெல்லாம் மனதில் கொண்டே அதிமுக பக்கம் சிறுபான்மையினர் சென்று விடக்கூடாது என்று உடனடியாக கல்வி நிறுவனங்களுக்கு, கப்ரஸ்தான், கல்லறைத் தோட்டம் என்று அவர்களுக்காக சலுகைகளை அவசர கதியில் முதல்வர் அறிவிக்கிறார்.

கிறிஸ்தவ உபதேசிகளுக்கு நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டிய நடைமுறைகளை தளர்த்துகிறார். கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத்தலங்கள், கல்லறை தோட்டங்கள், கபர்ஸ்தானங்கள் என சிறுபான்மையினருக்காக தங்களது மூளையையும் பணத்தையும் செலவிடும் திராவிட மாடல் அரசு பெரும்பான்மை இந்து சமுதாயத்தைப் பற்றியும் கொஞ்சம் கவலைப்பட வேண்டும். தமிழக அரசு பெரும்பான்மை இந்துக்களின் பல பிரச்சினைகளை கண்டு கொள்வதே இல்லை.

அனால் இனி உங்களின் வாக்கு வங்கி அரசியல் எடுபடாது தூங்கிய இந்துக்கள் விழித்து விட்டார்கள் . ஒட்டுமொத்த இந்துசமுதாயமும் கேள்வி கேட்கும் காலம் வந்துவிட்டது. இனியாவது திமுக; அதிமுக போன்ற கட்சிகள் இந்துக்களின் நலனில் அக்கறையோடு செயல்பட வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories