பாஜக.,வில் கட்சியை இணைத்தார் சமக., தலைவர் சரத் குமார்!

sarath kumar in bjp - 2026

எதிர்பாராத நிகழ்வாக, தாம் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை, பாஜக.,வுடன் இணைத்தார் நடிகரும் அர்சியல்வாதியுமான சரத் குமார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாஜக.,வுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைப்பது குறித்து முடிவு செய்து, அதுகுறித்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார் சரத் குமார். அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் கட்சியை பாஜக.,வுடன் இணைக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். பெரும்பாலான நிர்வாகிகளின் முடிவை ஏற்று கட்சியை பாஜக.,வுடன் இணைப்பதாக அவர்கள் மத்தியில் சரத்குமார் அறிவித்தார்.

இதுகுறித்து, தமிழக பாஜக., மாநில தலைவர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை, பொறுப்பாளர் அரவிந்த் மேனன், துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன் உள்ளிட்டோர், சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்தார்கள். அங்கே, சமக., பாஜக.,வுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டு, இணைப்பு விழா நடந்தது.

இதை அடுத்து, சரத் குமாருக்கு பாஜக., நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பாஜக.,வுடன் தன் கட்சியை இணைத்த சரத்குமாருக்கு நிர்வாகிகள் ஒவ்வொருவரும் சால்வை அணிவித்தனர். பாஜக.,வுடன் முன்னதாக கூட்டணி மட்டுமே அமைத்து இரு தொகுதிகளில் போட்டியிடப் போவதாகக் கருத்து தெரிவித்து வந்த சரத் குமார், திடீரென சமத்துவ மக்கள் கட்சியையே பாஜக.,வுடன் இணைத்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

காமராஜரைப் போல் மோடி ஆட்சி

இது குறித்து சரத்குமார் கூறியபோது, “பெருந்தலைவர் காமராஜரைப் போல பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்காகவும் இளைஞர்களின் நலன் கருதியும் சமத்துவ மக்கள் கட்சியை பாஜக.,வுடன் இன்று இணைத்துள்ளேன். இது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. பாஜக.,வில் சமத்துவ மக்கள் கட்சியை இணைப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளின் கருத்துகளையும் பெற்றுள்ளேன். உங்களது விருப்பம் மற்றும் மக்கள் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியை இணைத்துள்ளோம். இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு. மக்கள் பணிக்கான தொடக்கமாகவும் இது அமைந்துள்ளது” என்றார்.

சரத்குமார் கடந்த 2007ல், சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். திமுக., அதிமுக., என இரண்டு கழகங்களுடனும் கூட்டணி வைத்து தேர்தல்களை சந்தித்தார். ஒருமுறை தென்காசி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். கடந்த 17 ஆண்டுகளாக சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த அவர் தற்போது, பாரதிய ஜனதா கட்சியுடன் தனது 17 ஆண்டுக் காலம் நடத்தி வந்த கட்சியை இணைத்திருப்பது இன்றைய ஆச்சரியமான சம்பவமாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை இது குறித்து கருத்து தெரிவித்த போது,

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமைத்துவதால் ஈர்க்கப்பட்ட சிறந்த தேசியவாதியான திரு சரத்குமார் அவர்கள், இன்று, தமிழக பாஜக மூத்த தலைவர்கள் & பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு அரவிந்த் மேனன் அவர்கள் முன்னிலையில் அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தனது கலைத்திறன் மூலம் தேசிய உணர்வுக்கு குரல் கொடுத்த திரு சரத்குமார் அவர்கள், தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நேரத்தில், திரு சரத்குமார் அவர்கள் எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவாகும். தமிழக பாஜக சார்பில், பாஜக குடும்பத்திற்கு திரு சரத்குமார் அவர்களை மனதார வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories