தாலாட்டும் இந்தியா; வாலாட்டும் இலங்கை: சீனக் கப்பலுக்கு அனுமதி!

Published:

chinese ship - 2026
#image_title

சீனாவின் உளவுக் கப்பலை இலங்கை தன் கடற்பகுதியில் நிறுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவுக்கு இடையிலான உறவுகளில் மீண்டும் ஒரு புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.

சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கடந்த நவம்பர் மாதம் நிலை நிறுத்தப்பட்டது. இதற்கு இந்தியா தனது கவலையை இலங்கை அரசிடம் தெரிவித்தது.

இதை அடுத்து சர்வதேச ஆய்வுக் கப்பல்கள் தங்களது துறைமுகங்களில் நிறுத்த இலங்கை அரசு ஓர் ஆண்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், அண்மையில், ஜெர்மனி ஆய்வுக் கப்பலுக்கு மட்டும் இலங்கை அரசு அனுமதி அளித்தது. அதே நேரம் சீனக் கப்பலை திருப்பி அனுப்பியது.

தங்கள் நாட்டுக் கப்பல் திருப்பி அனுப்பப் பட்டதற்கு, இலங்கை அரசிடம் சீனா தனது கண்டனத்தைத் தெரிவித்தது. இந்நிலையில், இனி அனைத்து ஆய்வுக் கப்பல்களையும் தங்களது துறைமுகங்களில் நிறுத்த அனுமதிக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இதை அடுத்து சீன ஆய்வுக் கப்பல்களுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளிக்க உள்ளது தெளிவாகியுள்ளது. கடலில் ஆய்வு செய்வதாகக் கூறி சீன கப்பல்கள் இந்தியாவின் கடல் கட்டமைப்பை உளவு பார்ப்பதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் மீண்டும் இது போன்ற சூழல் எழுந்துள்ளதால், இந்தியத் தரப்பில் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

Related articles

Recent articles

spot_img