
சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 16க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்று பட்டாசு ஆலை விபத்தில் பாலகுருசாமி என்பவர் உயிரிழந்தார்.
சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலையில் இன்று சிவகாசி திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமானது. மேலும் இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 16க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமாகியுள்ளது.
இருவர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் கால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கி யாரேனும் உயிரிழந்து உள்ளன என்பது குறித்து சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறையா அல்லது பணி ஏதும் நடைபெற்றதா பட்டாசு வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து வெம்பக்கோட்டை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், மற்றும் கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய பட்டாசு / தீப்பெட்டி ஆலைகள் செயல்படுகின்றன. லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பணிபுரிகின்றார்கள்; பட்டாசுத் தொழிலில் ஆபத்தான வெடி மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் பல கட்டுப்பாடுகள் உண்டு. பொதுவாக 10× 10 விஸ்தீரணம் உள்ள அறையில் 4 வாசல்கள் அமைத்து 4 பேர் மட்டுமே பணி புரிய வேண்டும்.
இந்த சிறிய அறைகளை 10 லட்சம் வரையில் குத்தகைக்கு எடுத்து தொழில் செய்யும் சிறிய தொழில் முனைவோரால் குந்தவைக்குக் கொடுத்த ரூ பத்து லட்சத்தைத் திரும்ப எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்பதால் விதிமுறைகளை மீறி பயிற்சி அற்றவர்களையும், 4 பேர் பணிபுரிய வேண்டிய அறையில் 20 பேர் வரையும் இத்தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். பயிற்சி அற்றவர்கள் செய்யும் தவறுகளும், சிறிய அறைகளில் பன்மடங்கு பணியாளர்கள் பணி செய்வதும் எளிதாக விபத்து ஏற்படுவதற்கும், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் காரணமாகி விடுகிறது. இதன் தொடர்ச்சியாகவே கடந்த வாரம் சின்னக் காமன்பட்டியில் ஏற்பட்ட விபத்தில் பத்து பேர் இறந்துள்ளனர்; இன்று ஏற்பட்ட விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள 32 அறைகள் தரைமட்டமாகி உள்ளது; ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நடக்கிறது; அதனால் உயிரிழப்புகள் தொடர் நிகழ்வுகள் ஆகின்றன. இதனால் சிவகாசி நவீனக் கொலைக்களமா? எனக் கேள்வி எழுகிறது. பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தற்போது வரையிலும் முறையான இழப்பீடுகள் வழங்கப்படாமல் பல இழுத்தடிப்புகளுக்குப் பிறகு ஒரு சில லட்சங்கள் பெறுவதே மிகக் கடினமாக உள்ளது.
உலகின் பல பகுதிகளிலும் பட்டாசு ஆலைகள் உண்டு. அந்நாடுகளில் சட்ட விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதால் விபத்துக்கள் தடுக்கப்படுகின்றன. ஆனால், நமது தேசத்தில் தொழிலாளர்களைப் பாதுகாக்க விதிமுறைகளை அமலாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுத் துறை அதிகாரிகள் ஊழலில் ஊறித் திளைப்பதால் முறையான கண்காணிப்புகள் இல்லாமல் போய் விடுகின்றன. எனவே இனிமேல் இது போன்ற விபத்துக்களைத் தடுக்க விதிமுறைகள் அமலாக்காத அதிகாரிகளைப் பொறுப்பாக்கி, கைது செய்து அவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் சிவகாசி பகுதிகளில் தொழிலாளர்களும் பாதுகாக்கப்படுவார்கள்; பட்டாசுத் தொழில்களும் பாதுகாக்கப்படும்.
இந்த நிலையில் இன்று சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பாலகுருசாமி என்பவர் உயிரிழந்தார்.





