காவிரி விவகாரம்: விவாதிக்கக் கூடுகிறது சட்டமன்ற சிறப்புக் கூட்டம்!

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

சென்னை:  காவிரி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, இன்று மாலை கூடுகிறது தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம்!

காவிரி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக இன்று மாலை 3.30 மணி அளவில் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. மதியம் 1.10 மணி அளவில் தமிழக பட்ஜெட் உரை முடிந்ததும், சபாநாயகர் மீண்டும் 3.30 மணி அளவில் அவை கூடுவதாகக் குறிப்பிட்டார்.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. அந்தத் தீர்ப்பின்படி 6 மாதத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; தமிழகத்துக்கு 177.2 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டியவை குறித்தும் குறிப்பிட்டது.

இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்காக,  ஒரு திட்ட அமைப்பு  உருவாக்கப்படும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

இதை அடுத்து, பட்ஜெட் விவாதம் நடைபெறுவதாக இருந்த நிலையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழக அதிமுக., எம்.பி.க்கள் நடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பட்ஜெட் விவாதம் இன்றி குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று தமிழக அரசை கண்டித்து, கருப்பு சட்டை அணிந்து வந்த திமுக., உறுப்பினர்கள், இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க இன்று மாலை 3.30 மணி அளவில் சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை 10.30க்குத் தொடங்கிய பட்ஜெட் உரைக் கூட்டம், மதியம் 1.10 வரை நீடித்தது. சுமார் 2.30 மணி நேரத்துக்கு பட்ஜெட் உரையை நின்றபடி வாசித்தார் ஓ.பி.எஸ்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories