பேரவையில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள்: ’பேரவை செல்ல வாய்ப்பில்லாத’ ராமதாஸ்!

Published:

ramadoss - 2026

காவிரி மேலாண்மை வாரியம் என்பது ஒரு சடங்கு என்று கூறியுள்ளார் பாமக., நிறுவனர் ராமதாஸ். மேலும், அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக பேரவையில் கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்

தமிழக சட்டப் பேரவையில் இன்று பிற்பகல் தமிழக அரசு ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அது, 6 வார காலத்துக்குள் மத்தியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திமுக.,வும் கூறியது. முன்னதாக இதையே ஒரு சாக்காக வைத்து, இன்று காலை நடைபெற்ற பட்ஜெட் உரையை திமுக., கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டு அவைக்குச் சென்று எதிர்ப்பு தெரிவித்ததுடன், வெளிநடப்பும் செய்து, பட்ஜெட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதாகக் காட்டிக் கொண்டது. இருப்பினும் பின்னர் பிற்பகல் நடைபெற்ற தீர்மான நடவடிக்கையில் கார சார விவாதத்தில் ஈடுபட்டதுடன், தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் கூறியது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இந்நிலையில், இந்த நடவடிக்கைகள் எல்லாம் கிச்சு கிச்சு மூட்டுவது போல் நகைச்சுவையாக இருக்கிறது என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் ட்வீட்டியிருக்கிறார்.

அவரது ட்வீட்…

தமிழக சட்டப்பேரவையில் ஒரு சடங்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதைப் போல, எப்படியோ அழுத்தம் தர வேண்டிய விஷயத்தில் கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை தான் சொல்கிறேன்!

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img