December 5, 2025, 9:54 PM
26.6 C
Chennai

அதிமுக.,வில் புதிய நிர்வாகிகள்! பட்டியலை வெளியிட்டனர் ஓபிஎஸ்-இபிஎஸ்!

edappadi panneer e1521029872883 - 2025

சென்னை:

அதிமுக.,வில் புதிய நிர்வாகிகள் பட்டியலை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

அவர்கள் வெளியிட்ட பட்டியலின்படி…

கட்சி அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் பொன்னையன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஜே.சி.டி.பிரபாகர், எம்.பி. டாக்டர் வா.மைத்ரேயன், முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், செய்தி தொடர் பாளர் கோகுல இந்திரா, முன்னாள் வாரியத் தலைவர் ஆதிராஜாராம், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், புத்திசந்திரன் மற்றும் என்.முருகுமாறன் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

கட்சி கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் நியமிக்கப் பட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக முன்னாள் அமைச்சர் என்.ஆர். சிவபதி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளராக முன்னாள் அமைச்சர் ஆ.பரஞ்ஜோதி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மீனவர் பிரிவு இணைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால், மகளிர் அணி துணை செயலாளர்களாக எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம், டாக்டர் அ.அழகு தமிழ்செல்வி, முன்னாள் எம்.எல்.ஏ., எல். ஜெயசுதா ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக தி.நகர் சத்தியா எம்.எல்.ஏ., வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக சு.ரவி எம்.எல்.ஏ., தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் வெல்லமண்டி நடராஜன் விடுவிக்கப்பட்டு ஏற்கனவே அவர் வகித்து வரும் கட்சி அவைத்தலைவர் பொறுப்பில் தொடருவார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக ப.குமார் எம்.பி., நியமிக்கப் படுகிறார்.

கட்சியின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, ‘வட சென்னை வடக்கு மாவட்டம்’ என செயல்பட்டு வரும் மாவட்ட கட்சி அமைப்பு, இன்று (நேற்று) முதல் அமைப்பு ரீதியாக ‘வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம்’, ‘வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம்’ என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

இதில் வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் மற்றும் வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்தில் கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பில் எஸ்.ஆர்.ராஜேஷ், வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளராக வெங்கடேஷ்பாபு எம்.பி., ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு) ஆகிய மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவில் திருத்தி அமைக்கப்பட்ட கட்சி மற்றும் சார்பு அமைப்புகளுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள்.

எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.அலெக்சாண்டர், எம்.எல்.ஏ., (ஏற்கனவே வகித்து வரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயலாற்றுவார்). இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் பொறுப் பில் இருக்கும் ப.குமார் ஆகியோர் இன்று (நேற்று) முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அதிமுக., அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை, அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் பணிகளை கவனிப்பதற்காக, ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த குழு பின்வருமாறு மாற்றி அமைக்கப்படுகிறது. எம்.எல்.ஏ., ஜக்கையன், முன்னாள் எம்.பி. யு.ஆர்.கிருஷ்ணன் மற்றும் தாடி ம.ராசு, கா.சங்கரதாஸ் நியமிக்கப்படுகிறார்கள்.

அதேபோல் தேனி மாவட்ட செயலாளர் பொறுப்பில் முன்னாள் எம்.பி., சையதுகான், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக ஆ.சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

இதனை ஓ.பன்னீர்செல்வம் தனது ட்வீட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். அந்தப் பதிவுகள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories