கமல் கட்சியில் இருந்து ராஜசேகரன் விலகிய நிலையில் நடிகை ஸ்ரீ பிரியவும் விலகல்?

மக்கள் நீதி மய்யம் கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்றும் அதனால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் வழக்கறிஞர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட போது, முன்னாள் போலீஸ் அதிகாரி மவுரியா, ஸ்டார் ஜெராக்ஸ் சவுரிராஜன் உட்பட பலர் கட்சியில் சேர காரணமாக ராஜசேகர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. sri priya - 2026

தான் கட்சியில் இருந்து விலகியுள்ளது குறித்து பேசிய வழக்கறிஞர் ராஜசேகர், கடந்த ஆறு மாதங்களாக கட்சி உருவாக பாடு பட்டு உழைத்தேன். ஆனால் அதற்கான அங்கீகாரமோ, மரியாதையோ கிடைக்கவில்லை. அதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்றார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீ பிரியவும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ பிரியா தரப்பில் விசாரித்த போது, எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

நடிகர் கமல்ஹாசனால் கடந்த பிப்ரவரி 21ம் தேதி மதுரையில் தொடங்கப்பட்டது மக்கள் நீதி மய்யம். அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அகில இந்தியப் பொறுப்பாளராக தங்கவேல் அறிவிக்கப்பட்டார். மகேந்திரன், அருணாசலம், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீபிரியா, ராஜ்குமார், கமிலா நாசர், சவுரிராஜன், ராஜசேகரன், சி. கே. குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜநாராயணன், ஆர். ஆர். சிவா ஆகியோரை உயர்மட்டக் குழுப் பொறுப்பாளர்களாக கமல்ஹாசன் அறிவித்தார்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இதை தொடர்ந்து, திருச்சியில் பொது கூட்டம் நடத்திய போது பேசிய கமல்ஹாசன் தான் முதல்வரானால், லோக் ஆயுக்த அமைக்கும் சட்டம், மனித கழிவுகளை அகற்றும் பணிகளை எந்திரமயமாக்குவது, பள்ளிகளில் சாதியில்லை என்று குறிப்பிட்டு சேர்த்தால் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகிய மூன்று சட்டத்தில் கையெழுத்திடுவேன் முதல் கையெழுத்திடுவேன் என்றும் தெரிவித்தார். தமிழக அரசியல் நிலை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த அவர், காவிரி நதிநீர், ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக திரைத்துறையினர் நடத்தும் போராட்டத்திலும் பங்கேற்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories