December 5, 2025, 7:40 PM
26.7 C
Chennai

கமல் கட்சியில் இருந்து ராஜசேகரன் விலகிய நிலையில் நடிகை ஸ்ரீ பிரியவும் விலகல்?

மக்கள் நீதி மய்யம் கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்றும் அதனால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் வழக்கறிஞர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட போது, முன்னாள் போலீஸ் அதிகாரி மவுரியா, ஸ்டார் ஜெராக்ஸ் சவுரிராஜன் உட்பட பலர் கட்சியில் சேர காரணமாக ராஜசேகர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. sri priya - 2025

தான் கட்சியில் இருந்து விலகியுள்ளது குறித்து பேசிய வழக்கறிஞர் ராஜசேகர், கடந்த ஆறு மாதங்களாக கட்சி உருவாக பாடு பட்டு உழைத்தேன். ஆனால் அதற்கான அங்கீகாரமோ, மரியாதையோ கிடைக்கவில்லை. அதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்றார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீ பிரியவும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீ பிரியா தரப்பில் விசாரித்த போது, எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

நடிகர் கமல்ஹாசனால் கடந்த பிப்ரவரி 21ம் தேதி மதுரையில் தொடங்கப்பட்டது மக்கள் நீதி மய்யம். அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அகில இந்தியப் பொறுப்பாளராக தங்கவேல் அறிவிக்கப்பட்டார். மகேந்திரன், அருணாசலம், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீபிரியா, ராஜ்குமார், கமிலா நாசர், சவுரிராஜன், ராஜசேகரன், சி. கே. குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜநாராயணன், ஆர். ஆர். சிவா ஆகியோரை உயர்மட்டக் குழுப் பொறுப்பாளர்களாக கமல்ஹாசன் அறிவித்தார்.

இதை தொடர்ந்து, திருச்சியில் பொது கூட்டம் நடத்திய போது பேசிய கமல்ஹாசன் தான் முதல்வரானால், லோக் ஆயுக்த அமைக்கும் சட்டம், மனித கழிவுகளை அகற்றும் பணிகளை எந்திரமயமாக்குவது, பள்ளிகளில் சாதியில்லை என்று குறிப்பிட்டு சேர்த்தால் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகிய மூன்று சட்டத்தில் கையெழுத்திடுவேன் முதல் கையெழுத்திடுவேன் என்றும் தெரிவித்தார். தமிழக அரசியல் நிலை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்த அவர், காவிரி நதிநீர், ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக திரைத்துறையினர் நடத்தும் போராட்டத்திலும் பங்கேற்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories