ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமின் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனுவை வரும் ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு என்பது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர், சென்னையின் ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்து, அதற்குக் கைமாறாக மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து சன் டிடிஎச் (சன் டைரக்ட்) நிறுவனம் 599 கோடி ரூபாய் முறைகேடாக முதலீடு பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இம்முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வுச் செயலகம் குற்றவழக்கு பதிவு செய்து, சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
2ஜி ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் 1,700 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறனிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி கலாநிதி மாறனுக்கு சொந்தமான 742 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கி அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது