ஜெயலலிதா நினைவு மண்டபம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும் -முதல்வர்

Published:

May 07 Jaya 08 - 2026மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.50 கோடியே 80 லட்சம் செலவில் வேலைப்பாடுடன் கூடிய நினைவு மண்டபம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பீனிக்ஸ் பறவை வடிவில் சிறந்த கலைநயத்துடன் கூடிய வடிவமைப்புடன் நினைவு மண்டபம் கட்டப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா காலை 9 மணியளவில் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நடைபெற்றது.விழாவுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினர். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது ஜெயலலிதா நினைவு மண்டபம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும் என கூறினார்

Related articles

Recent articles

spot_img