போதை மகனைக் கொன்றதாக எழுத்தாளர் சௌபா கைது!

sauba1 horz - 2026

மதுரை:போதை மகனைக் கொன்றதாக அளிக்கப் பட்ட புகாரில், எழுத்தாளர் சௌபா என்ற சௌந்தரபாண்டியன் இன்று போலீஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

மதுரை எஸ்எஸ்.காலனி பகுதியிலுள்ள டோக் நகர் 5-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் செளபா என்ற சௌந்திரபாண்டியன் (55). எழுத்தாளரான இவரது மனைவி லதா பூரணம் கோவில்பட்டி அரசு கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிகிறார்.

இவர்களது மகன் விபின் (27). விபினுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 15 வருடங்களாக  கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர். விபின் இருவரிடமும் அவ்வப்போது தங்கி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக தந்தையுடன் மதுரையில் தங்கி இருந்தார்.

இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி முதல் தனது மகனின் செல்போனில் பேச லதா பூரணம் முயன்றுள்ளார். ஆனால் அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் சந்தேகப்பட்டு தனது மகனை மே 5ஆம் தேதி முதல் காணவில்லை என எஸ்.எஸ்.காலனி போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் விபின் மாயமானதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இதனிடையே, சந்தேகத்தின் பேரில் அவரது தந்தை சௌந்திரபாண்டியனிடம் 3 நாட்களாக விசாரித்தனர். இதில் மகன் விபினை சௌந்திரபாண்டியன் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் கூறியது…

சௌந்திரபாண்டியனிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது மகன் எங்கிருக்கிறார் என தெரியாது என்றும், எங்காவது காப்பகத்தில் சேர்ந்திருக்கலாம் எனவும் முரண்பட்ட தகவல்களைத் தொடர்ந்து கூறி வந்தார். இதற்கிடையில் விபின் இறந்து விட்டதாக நேற்று மாலை தகவல் கிடைத்தது.

இதை உறுதி செய்ய சௌந்திரபாண்டியனுக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகில் உள்ள அவரது தோட்டத்துக்குச் சென்றோம். அங்கு பணிபுரியும் பள்ளப்பட்டியைச் சேர்ந்த பூமி(40), நிலக்கோட்டையைச் சேர்ந்த கனிக்குமார்(42) ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம். இதில் விபின் இறந்த நிலையில், அவரது தந்தை சௌந்திரபாண்டியன் தனது காரில் கொண்டு வந்ததாகவும், மகனின் உடலை எரித்து, 6 அடி குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் மீண்டும் சௌந்திரபாண்டியனிடம் விசாரித்தோம். மது போதையில் இருந்த விபின் வீட்டில் தன்னுடன் தகராறில் ஈடுபட்டபோது, ஆத்திரத்தில் சுத்தியலால் தாக்கியபோது, எதிர்பாராத விதமாக மகன் இறந்துவிட்டதாக சௌந்திரபாண்டியன் கூறினார். அவரது உடலை தோட்டத்துக்குக் கொண்டு சென்று எரித்து புதைத்ததாகத் தெரிவித்தார்.

எனிலும் விபினின் உடலை இன்று (மே 10) வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்த பின்னரே உறுதிப்படுத்த முடியும். தற்போது கிடைத்த ஆதாரம், தோட்ட தொழிலாளர்கள் அளித்த தகவலின்பேரில் விபின் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளோம். அவரது தந்தை சௌந்திரபாண்டியன் உட்பட 3 பேரும் எங்களது விசாரணை வளையத்தில் உள்ளனர் என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories