முதல்-அமைச்சர் இன்று கோவில்பட்டி வருகை

16 May 10 edapadi - 2026முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவில்பட்டி வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் கோவில்பட்டி நகரசபையில் ரூ.81¾ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள 2-வது குடிநீர் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.

குடிநீர் குழாய் திட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கோவில்பட்டி நகரசபை 2-வது குடிநீர் குழாய் திட்டம் தொடக்கம், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்குகிறார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, கோவில்பட்டி நகரசபையில் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள 2-வது குடிநீர் குழாய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

மாநகராட்சி திட்டங்கள்

ரூ.127 கோடி பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ரூ.39 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள 4 கட்டிடங்கள், தூத்துக்குடி மாநகராட்சியில் 12 இடங்களில் ரூ.6 கோடியே 35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள பூங்காக்கள், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் ரூ.36 கோடியே 88 லட்சம் செலவில் 109 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களையும், கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் ரூ.23 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள கால்நடை கிளை மருந்தகம், பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.36 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள 2 கட்டிடங்கள், வேளாண்மைத்துறையின் மூலம் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான கட்டிடம் ஆக மொத்தம் ரூ.127 கோடியே 24 லட்சம் மதிப்பிலான நிறைவு பெற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.

மேலும், கோவில்பட்டி நகரசபை மூலம் 2 இடங்களில் ரூ.64 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கும், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை மூலம் 9 இடங்களில் ரூ.13 கோடியே 91 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை மூலம் 133 இடங்களில் ரூ.33 கோடியே 23 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள கட்டிடங்கள் ஆக மொத்தம் ரூ.47 கோடியே 79 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள 144 கட்டிட பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.

நலத்திட்ட உதவிகள்

விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 5 ஆயிரத்து 636 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் வழங்குகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories