முதல்-அமைச்சர் இன்று கோவில்பட்டி வருகை

16 May 10 edapadi - 2026முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவில்பட்டி வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் கோவில்பட்டி நகரசபையில் ரூ.81¾ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள 2-வது குடிநீர் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.

குடிநீர் குழாய் திட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கோவில்பட்டி நகரசபை 2-வது குடிநீர் குழாய் திட்டம் தொடக்கம், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்குகிறார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, கோவில்பட்டி நகரசபையில் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள 2-வது குடிநீர் குழாய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

மாநகராட்சி திட்டங்கள்

ரூ.127 கோடி பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ரூ.39 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள 4 கட்டிடங்கள், தூத்துக்குடி மாநகராட்சியில் 12 இடங்களில் ரூ.6 கோடியே 35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள பூங்காக்கள், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் ரூ.36 கோடியே 88 லட்சம் செலவில் 109 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களையும், கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் ரூ.23 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள கால்நடை கிளை மருந்தகம், பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.36 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள 2 கட்டிடங்கள், வேளாண்மைத்துறையின் மூலம் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான கட்டிடம் ஆக மொத்தம் ரூ.127 கோடியே 24 லட்சம் மதிப்பிலான நிறைவு பெற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

மேலும், கோவில்பட்டி நகரசபை மூலம் 2 இடங்களில் ரூ.64 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கும், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை மூலம் 9 இடங்களில் ரூ.13 கோடியே 91 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை மூலம் 133 இடங்களில் ரூ.33 கோடியே 23 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள கட்டிடங்கள் ஆக மொத்தம் ரூ.47 கோடியே 79 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள 144 கட்டிட பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.

நலத்திட்ட உதவிகள்

விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 5 ஆயிரத்து 636 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் வழங்குகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories