December 5, 2025, 6:28 PM
26.7 C
Chennai

முதல்-அமைச்சர் இன்று கோவில்பட்டி வருகை

16 May 10 edapadi - 2025முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவில்பட்டி வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் கோவில்பட்டி நகரசபையில் ரூ.81¾ கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள 2-வது குடிநீர் திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.

குடிநீர் குழாய் திட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கோவில்பட்டி நகரசபை 2-வது குடிநீர் குழாய் திட்டம் தொடக்கம், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்குகிறார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, கோவில்பட்டி நகரசபையில் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ள 2-வது குடிநீர் குழாய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

மாநகராட்சி திட்டங்கள்

ரூ.127 கோடி பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ரூ.39 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள 4 கட்டிடங்கள், தூத்துக்குடி மாநகராட்சியில் 12 இடங்களில் ரூ.6 கோடியே 35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள பூங்காக்கள், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் ரூ.36 கோடியே 88 லட்சம் செலவில் 109 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களையும், கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் ரூ.23 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள கால்நடை கிளை மருந்தகம், பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.36 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள 2 கட்டிடங்கள், வேளாண்மைத்துறையின் மூலம் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான கட்டிடம் ஆக மொத்தம் ரூ.127 கோடியே 24 லட்சம் மதிப்பிலான நிறைவு பெற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.

மேலும், கோவில்பட்டி நகரசபை மூலம் 2 இடங்களில் ரூ.64 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கும், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை மூலம் 9 இடங்களில் ரூ.13 கோடியே 91 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை மூலம் 133 இடங்களில் ரூ.33 கோடியே 23 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட உள்ள கட்டிடங்கள் ஆக மொத்தம் ரூ.47 கோடியே 79 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள 144 கட்டிட பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.

நலத்திட்ட உதவிகள்

விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் 5 ஆயிரத்து 636 பயனாளிகளுக்கு ரூ.16 கோடியே 94 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் வழங்குகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories