நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக சமத்துவப்படையின் நிறுவனத்தலைருவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவகாமி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–
திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுப்பிரியா, உயர் போலீஸ் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், இதை மூடி மறைக்க போலீஸ் அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


