எம்.எல்.ஏ.சோம்நாத் பாரதிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு : சமரசம் பேசி வழக்கை முடிக்க நீதிபதிகள் அறிவுரை

டெல்லி மாநில ஆம் அத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. சோம்நாத் பாரதி. இவர் டெல்லியின் முன்னாள் சட்ட அமைச்சராகவும் இருந்தார். கடந்த ஜூன் மாதம், சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லிபிகா மித்ரா மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்றினை அளித்தார். அதில், திருமணமானது முதல் தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும், கொலை செய்யவும் முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவகாரத்தில் சோம்நாத் பாரதி மீது கடந்த மாதம் 10-ம் தேதி வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அவர் முன் ஜாமீன் பெற்றார். ஆனால், போலீசில் ஆஜராகாமல் சோம்நாத் பாரதி தலைமறைவாக இருந்ததால், அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனது.

இதனையடுத்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, டெல்லி துவாரகா காவல் நிலையத்தில் சோம்நாத் பாரதி சரணடைந்தார். பின்னர் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு நாட்களாக சோம்நாத் பாரதியிடம் அவரது மனைவி முன்னிலையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சோம்நாத் பாரதியின் மனுவை ஏற்று இடைக்கால ஜாமின் வழங்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு (அக்.5) ஒத்திவைத்த நீதிபதிகள், லிபிகா மித்ரா அன்றைக்கே தனது கருத்தினை தெரிவிக்கலாம் என்று கூறினர்.

மேலும், சோம்நாத் பாரதியின் மனைவி லிபிகா மித்ரா விரும்பினால், இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே சமரசமான முறையில் பேசி தீர்வு காணலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories