வோக்ஸ்வேகன் கார் நிறுவன முறைகேட்டை தொடர்ந்து பிரச்சனையில் சிக்கும் உலகின் பிரபல கார் நிறுவனங்கள்

Published:

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைகழக்கத்தில் பேராசிரியராக உள்ள சென்னையை சேர்ந்த டாக்டர் அரவிந்த் திருவேங்கடம், விஞ்ஞானி அம்பலப்படுத்தினார்.

தன் டீசல் கார்களில் செய்த, ளைப் பற்றிய தகவல் கடந்த வாரம், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையான இ.பி.ஏ., மூலம் வெளிவந்தது.

இதில், வோக்ஸ்வேகன் நிறுவனம் உலக அளவில் விற்பனை செய்த ஒரு கோடியே பத்து லட்சம் டீசல் கார்களில், மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்துள்ளது என, இ.பி.ஏ., குற்றஞ்சாட்டியது.இந்நிலையில் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்ட்டின் வின்டர்கான், மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருளில் மோசடி அம்பலம் ஆனதை அடுத்து ராஜினாமா செய்தார்.

மேலும் தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உலகின் இரண்டாவது பெரிய வாகன அமைப்பான ’ஜெர்மன் ஆட்டோமொபைல் கிளப்’ புதிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. வால்வோ எஸ்.60, ரெனோல்டின் ஈஸ்பேஸ் மற்றும் ஜீப் ஆகியவை அனுமதிக்கப்பட்டதை விட 10 மடங்கு அதிகமாக மாசை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

மேலும், அனுமதிக்கப்பட்டதை விட அதிக மாசு வெளிப்பாட்டில் வோக்ஸ்வேகனை மட்டும் அல்லாமல் உலகின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களான மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ. மஸ்டா, பியட் மற்றும் போர்டு ஆகியவை ஈடுபட்டுள்ளதாக ‘ஜெர்மன் ஆட்டோமொபைல் கிளப்’ வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img