அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைகழக்கத்தில் பேராசிரியராக உள்ள சென்னையை சேர்ந்த டாக்டர் அரவிந்த் திருவேங்கடம், விஞ்ஞானி அம்பலப்படுத்தினார்.
தன் டீசல் கார்களில் செய்த, ளைப் பற்றிய தகவல் கடந்த வாரம், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையான இ.பி.ஏ., மூலம் வெளிவந்தது.
இதில், வோக்ஸ்வேகன் நிறுவனம் உலக அளவில் விற்பனை செய்த ஒரு கோடியே பத்து லட்சம் டீசல் கார்களில், மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்துள்ளது என, இ.பி.ஏ., குற்றஞ்சாட்டியது.இந்நிலையில் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்ட்டின் வின்டர்கான், மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருளில் மோசடி அம்பலம் ஆனதை அடுத்து ராஜினாமா செய்தார்.
மேலும் தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலகின் இரண்டாவது பெரிய வாகன அமைப்பான ’ஜெர்மன் ஆட்டோமொபைல் கிளப்’ புதிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. வால்வோ எஸ்.60, ரெனோல்டின் ஈஸ்பேஸ் மற்றும் ஜீப் ஆகியவை அனுமதிக்கப்பட்டதை விட 10 மடங்கு அதிகமாக மாசை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனுமதிக்கப்பட்டதை விட அதிக மாசு வெளிப்பாட்டில் வோக்ஸ்வேகனை மட்டும் அல்லாமல் உலகின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனங்களான மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ. மஸ்டா, பியட் மற்றும் போர்டு ஆகியவை ஈடுபட்டுள்ளதாக ‘ஜெர்மன் ஆட்டோமொபைல் கிளப்’ வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.



