சீக்கியர்களுக்கு பணியிடங்களில் தலைப்பாகை அணிய இங்கிலாந்தில் கடந்த 1989 ஆம் ஆண்டில் இருந்து விதிக்கப்பட்டிருந்த தடை, தற்போது 26 வருடங்களுக்கு பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணியாளர்கள் மட்டும் ஹெல்மட் அணிவதில் இருந்து விலக்கு அளித்து “டர்பன்” என கூறப்படும் தலைப்பாகை அணிந்து கொள்ளலாம். ஆனால் பிற துறைகளைச் சேர்ந்த சீக்கியர்கள், ஹெல்மட் கட்டாயம் அணி வேண்டும் என்றும், அதற்கு மாறாக தலைப்பாகையை அணிந்தால், நடவடிக்கை எடுக்கவும் இங்கிலாந்தின் முந்தைய சட்டம் வகை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீக்கியர்கள் பல ஆண்டு காலமாக போராடி வந்தனர்.
இந்நிலையில் அவர்களது கோரிக்கையை தற்போது ஏற்றுக் கொண்ட இங்கிலாந்து அரசு தேவையான சட்ட திருத்தம் செய்து, பெரும்பாலான பணியிடங்களிலும், துறைகளிலும் சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதற்கு தடை இல்லை என்று அறிவித்துள்ளது.



