தேவர் குருபூஜையை முன்னிட்டு, இன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு முகாம் அலுவலகத்தில் உள்ள தேவர் படத்திற்கு மலர் தூவி முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார்.இருவருடன் அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அனிவித்தும்பலர், மலர் வளையம் வைத்தும் மரியாதை மரியாதை செலுத்தினார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தமிழகத்தின் போற்றத்தக்கத் தலைவர்களில் ஒருவர் ஆவார். இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியதில் தொடங்கி தலித்துகளின் ஆலய நுழைவுக்கு உதவியது& நிலம் வழங்கியது என பல நன்மைகளை செய்துள்ளார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடியது, தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என முழங்கியது என ஏராளமான சிறப்புகளுக்கு சொந்தக்காரராக அவர் திகழ்கிறார். அவரது சிறப்பை போற்றும் வகையில் தான் ஆண்டு தோறும் தேவர் குருபூஜை அரசு நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது.
பசும்பொன்னில் நடைபெறும் 53-வது தேவர் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களை தடுக்க பசும்பொன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அக்டோபர் 31-ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு உள்ளதால் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.
.


