நாமக்கல்:
நாமக்கல்ன்னாலே திமுக., அதிமுக., வுக்கு நாமம் போட்டு அனுப்ப வேண்டும்னு அர்த்தம் என்று தேமுதிக., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற தேமுதிக.,வின் மக்களுக்காக மக்கள் பணி என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய விஜயகாந்த் இவ்வாறு கூறினார்.
அப்போது அவர், இங்குக் கூடியிருக்கும் தொண்டர்களை பார்க்கும் போது உள்ளபடியே மனமகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கூட்டத்தை காசு கொடுத்து கூட்டியதாகக் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கூறினார். அதற்கு அவரிடம், ‘அப்படி கூட்டி வந்திருந்தால் ஆட்சியைப் பிடித்து இருப்போம்’ என்றேன்.
நாமக்கல் என்றால் ஆளுங்கட்சி மற்றும் திமுகவுக்கு நாமம் போட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அர்த்தம். வருகிற சட்டமன்ற தேர்தலில் இங்குள்ள 6 தொகுதிகளிலும் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும். எப்பாடு பட்டாவது அதிமுக, திமுகவை ஆட்சியில் அமரவிடமாட்டேன்… என்று பேசினார்.


