சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

19 June23 hockey - 2026நெதர்லாந்தின் பிரெடா நகரில் நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியின் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி.

இந்திய அணி சார்பில் வீரர்கள் ராமன் தீப் சிங், தில்ப்ரீத் சிங், மன்தீப் சிங், லலித் உபாத்யாயே ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

நெதர்லாந்தின் பிரெடா நகரில் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டி இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில், உலகின் சிறந்த ஆறு அணிகளான அர்ஜென்டீனா, உலகின் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

இன்று நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது இந்திய அணி. இரு அணிகளும் பரம வைரிகள் என்பதால், போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் கால்பகுதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதியில் இருபெனால்டி கார்னர்கள் இந்திய அணிக்குக் கிடைத்தும் அதில் கோலாக்கத் தவறியது.

2-வது கால் பகுதியில் 25-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ராமன் தீப் சிங் கோல் அடித்து அணியை 1-0 என்று முன்னிலைப்படுத்தினார்.

அதன்பின் 2-வது பகுதிநேர ஆட்டம் தொடங்கியது, இதில் முதலாவது கால்பகுதியில் இரு அணிகளும் போடவில்லை. இருப்பினும் 1-0 என்று கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து சாதகமான நிலையில் இருந்தது. இந்தப் பகுதியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் பந்தைகடத்திக் கொடுத்தார், ஆனால் எளிதான வாய்ப்பை தவறவிட்ட அந்த அணி வீரர் அஜாஸ் அகமது அதைக் கோலாக்காமல் கோட்டைவிட்டார். அதுமட்டுமல்லாமல் கிடைத்த முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பையும் பாகிஸ்தான் அணி தவறவிட்டது.

ஆனால், 2-வது கால்பகுதியின் கடைசி 15 நிமிடங்களில் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி கோல் மழை பொழிந்தனர். 54-வது நிமிடத்தில் இந்திய வீரர் தில்பிரீத் சிங் 2-வது கோல் அடித்தார்.

அடுத்த 3 நிமிடங்களில் 57-வது நிமிடத்தில் மன்தீப் சிங் 3-வது கோலையும், 59-வது நிமிடத்தில் லலித் உபாத்யாயே கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால், இறுதிவரை பாகிஸ்தான் அணி இறுதிவரை கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, 4-0 என்ற கோல்கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories