உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து பிரச்சனைகளும் இன்றைய தினம் பேசி தீர்க்கப்படும் என்றும், காவிரி ஆணையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்த பின், அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


