அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா இருக்கிறது: ஸ்டாலின்

Published:

09 July03 stalin - 2026தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார். பிற்பகலில் மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் முக ஸ்டாலின் தெரிவிக்கையில், லோக் ஆயுக்தா கொண்டு வருவதில் திமுகவுக்கு மகிழ்ச்சி. இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்யும் குழுவில் ஐகோர்ட் நீதிபதி ஒருவரை சேர்க்க வேண்டும். மற்ற மாநிலங்களில் முதல்வரை விசாரிக்கலாம் என தெளிவாக உள்ளது. இந்த மசோதாவில் அமைச்சர்கள் என குறிப்பிட்டு முதல்வரையும் சேர்த்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்கள் குறித்து இந்த அமைப்பில் முறையிட முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். என அவர் கூறினர். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத திமுக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், அதிகாரம் இல்லாத அமைப்பாக லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என்றார்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related articles

Recent articles

spot_img