அய்யா வைகுண்டர் கோவிலில் ஆனித் திருவிழா இன்று தொடங்குகிறது

18 July12 ayya vaikundar - 2026கோவை அடுத்த ஈச்சனாரியில் அய்யா வைகுண்டர் பூமனவைப்பதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று ஆனித்திருவிழா தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 4 மணிக்கு நடை திறப்பு, 8 மணிக்கு அய்யா தர்மத்திற்கு செல்லுதல், பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு நடைபெற்றது. பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படு கிறது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு உகப்படிப்பு, 6.30 மணிக்கு நித்தம் திருநாள் வாகனத்தில் அய்யா பவனி வருதல், 7 மணிக்கு திருஏடு வாசிப்பு, 8 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதனைத்தொடர்ந்து 14-ந்தேதி காலை 6 மணிக்கு உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு, அருள்வாக்கு, மாலை 6 மணிக்கு உகப்படிப்பு, 6.30 மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா பவனி வருதல், இரவு 7 மணிக்கு திருஏடு வாசிப்பு நடக்கிறது.

15-ந்தேதி காலை உகப்படிப்பு, 6.30 மணிக்கு தொட்டில் வாகனத்தில் அய்யா பவனி வருதல், பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, அருள்வாக்கு, மாலை 7 மணிக்கு உகப்படிப்பு, இரவு 7 மணிக்கு திருஏடு வாசிப்பு, பட்டாபிஷேகம், முளைப்பாரி எடுத்து சூரிய வாகனத்தில் ஈச்சனாரி விநாயகர் கோவில் வரை அய்யா பவனி வருதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

பின்னர் 16-ந்தேதி காலை 4 மணிக்கு குடும்பப்பால் வைத்து நித்தம் திருநாள் வாகனத்தில் அய்யா பவனி வருதல் நடக்கிறது. ஆனித்திருவிழாவை முன்னிட்டு வருகிற 14-ந்தேதி மாலை 4 மணிக்கு விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories