உலகிலேயே விரைவான பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடாக இந்தியா திகழ்கிறது என்று பெருமிதம் பொங்கக் கூறினார் பிரதமர் நரேந்திர மோடி!
Glimpses from ‘MOVE’, the Global Mobility Summit being held in Delhi. pic.twitter.com/fhgH38mKiA
— Narendra Modi (@narendramodi) September 7, 2018
தில்லியில் நேற்று நிதி ஆயோக் அமைப்பின் சிறப்பு ஏற்பாட்டில், உலகளாவிய குளோபல் மொபிலிடி சமிட் 20178 கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
அப்போது அவர், நாடு முழுவதும் நூறு சீர் மிகு நகரங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். தொழில் நடத்துவதற்குச் சிறந்த இடமாக இந்தியா மாறி வருகிறது என்று குறிப்பிட்ட அவர், இதன் மூலம் உலகிலேயே விரைவான பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடாக இந்தியா விளங்குவதாகத் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்து வசதிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்ட அவர், சிறந்த போக்குவரத்து வசதிகளால் மக்களின் பயணச் சுமை குறைவதாகவும், சரக்குப் போக்குவரத்து எளிமை ஆவதாகவும் கூறினார். போக்குவரத்து வசதிகளைச் செய்வதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாக்க முடியும் என்றார் மோடி.
Addressing MOVE, a special summit on the future of mobility. Watch my speech. https://t.co/9rgUalEWrG
— Narendra Modi (@narendramodi) September 7, 2018



