நிவாரண நிதி வழங்குவோருக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் : கி.வீரமணி

 
தமிழக வெள்ள நிவாரண நிதி வழங்க முன் வருபவர்களுக்கு 100 சதவீத வரிவிலக்கு பெற்றுத்தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரகணி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
 
மேலும் கி.வீரகணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: –
 
கர்நாடக அரசு முதலமைச்சர் தமிழ்நாடு துயர் துடைப்பு நிவாரண நிதிக்காக 5 கோடி ரூபாய் அளித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அண்டை மாநிலத்தின் நல்லுறவுக்கு ஒரு அடையாள அறிகுறி. காவிரி நதி நீர் பிரச்சினை வேறு, இந்த மனிதநேயம் வேறு.
 
பணம் அனுப்புவதற்காக கர்நாடக அரசு அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றுள்ள நிலையில் தமிழக அரசின் தரப்பிலிருந்து சரியான விடை கிடைக்கவில்லை என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளன. இதுபோலவே பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் 5 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளதும் வரவேற்கத்தக்கதே.
 
ஏற்கனவே முதன் முதலில் தி.மு.க. சார்பில் அதன் தலைவர் கருணாநிதி அறிவித்து, அதைப்பெறுவதற்கு முதலமைச்சரோ, நிதி அமைச்சரோ, தலைமைச்செயலாளரோ கிடைக்காத நிலையின் காரணமாக 2 நாள் முயற்சிக்குப்பின் நிதித்துறை செயலாளரிடம் தி.மு.க. பொருளாளரும், திமு.க. சட்டமன்றத் தலைவருமான மு.க.ஸ்டாலின் கொண்டு போய் கொடுத்துள்ளார்.
 
எனவே தனியே வெள்ள நிவாரண துறை ஒன்றை அதிகாரிகள் பொறுப்புக்குரியவர்களைக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பேரிடரைச் சந்தித்துக் கொண்டுள்ள நிலையில் நன்கொடை வழங்கிட முன் வருவோருக்கு 100 சதவீத நன்கொடை வரி விலக்கினை மத்திய அரசிடம் கேட்டுப்பெற்று, உடனடியாக அறிவித்தால் மேலும் மேலும் நிதி தமிழக அரசுக்குக்குவியும் என்பது உறுதி. எனவே உதவும் கரங்களை மட்டும் பாருங்கள், அது யாருடைய கரங்கள் என்று நிமிர்ந்து கூட பார்க்க வேண்டாம் என கி.வீரகணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Topics

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories