மூன்று தென் மாவட்ட மதிமுக., செயலர்கள் கருணாநிதி முன்னிலையில் திமுக.,வில் ஐக்கியம்

சென்னை:

தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்கள் மதிமுக.,வில் இருந்து விலகி கருணாநிதி முன்னிலையில் திமுக.,வில் இணைந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் தலைமையில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன், மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லை செல்வம் ஆகியோர் மதிமுக.,வில் இருந்து விலகி திமுக.,வில் இணைந்தனர். நேற்று மாலை 6.45க்கு திமுக., தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் வந்தார். தொடர்ந்து மதிமுக., மாவட்ட செயலாளர்கள் 4 பேரையும் மு.க.ஸ்டாலின் கருணாநிதி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் கருணாநிதிக்கு மாலை அணிவித்து கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பின்னர் ஜோயல், சரவணன், பெருமாள், தில்லை செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசியபோது, மதிமுக., பொதுச்செயலாளர் வைகோ கட்சி தொண்டர்களின் கருத்தை ஒரு போதும் கேட்பதில்லை. அவர் எண்ணியதைத்தான் கட்சிக்குள் திணிக்க முயல்வார். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலை மதிமுக., புறக்கணித்தது. அதற்கு ஒரு காரணம் இருந்தது. அதன் பிறகு கடந்த 4 ஆண்டுகளாக அரசியல் களத்தில் மதிமுக., தொண்டர்கள் பம்பரமாய் சுற்றி களப் பணியாற்றினர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இம்முறை திமுக.,வுடன் கூட்டணி சேருவோம் என்று கூறி வந்தார். திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி மக்கள் நல கூட்டு இயக்கம் கூட்டணியாக மாறும் என்றார். அ.திமுக.,வை வீழ்த்துவோம் என்று சொல்லி வந்தவர் மறைமுகமாக அ.திமுக.,விற்கு உதவும் வகையில் செயல்பட தொடங்கினார். எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாங்கள் இன்று தாய்க் கழகத்தில் இணைந்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஒரு மாற்று அணியாக மக்கள் நல கூட்டு இயக்கத்தை மக்கள் நல கூட்டணியாக மாற்ற வைகோ முடிவு எடுத்தபோது, அக்கட்சியில் இருந்து முன்னணித் தலைவர்கள் விலகினர். அக்கட்சியின் மாநில பொருளாளர் மாசிலாமணி, காஞ்சீபுரம் மாவட்ட செயலாளரும், வைகோவின் தீவிர விசுவாசியுமான பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன், மதிமுக., மாநில மகளிர் அணி செயலாளர் விஜயகுமாரி உள்பட பலர் மதிமுக.,வில் இருந்து விலகி கட்சி தலைமைக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினர். திமுக.,வில் இணைந்த அவர்களுக்கு திமுக., தலைமை பதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் தென்மாவட்ட செயலாளர்கள் 4 பேர் தங்கள் ஆதரவாளர்களுடன் திமுக.,வில் ஐக்கியமாகியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories