‘வடசென்னை’ சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படும்: வெற்றிமாறன் வருத்தம்!

vadachennai movie - 2026

‘வடசென்னை’ படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார் இயக்குநர் வெற்றிமாறன்.


வட சென்னை படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குறிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும்; தனி நபரையோ, சமூகத்தையோ இழிவுபடுத்த வேண்டும் என்பது நோக்கம் இல்லை படத்தில் உள்ள காட்சிகளால் யாருடைய மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்

– இயக்குநர் வெற்றிமாறன்


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘வடசென்னை’. தனுஷ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் தனுஷுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள். படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும், இதில் மீனவர்களை தவறாக சித்திரித்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எங்கள் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மீனவ சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், அவர்களது மனம் புண்படும்படியாகவும் இருப்பதாக மீனவ அமைப்பினர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

நான் தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு பேசினேன். எங்கள் நோக்கம் எப்போதுமே, எந்தவொரு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிராக அரசியலோ, சினிமாவோ செய்வதல்ல. இப்படத்தில் சில காட்சிகள், குறிப்பாக கப்பலில் நடக்கும் முதலிரவு காட்சி மீனவ சமுதாயத்தை மிகவும் இழிவாக சித்திரிப்பதாக அவர்கள் சொல்லியிருந்தார்கள். அக்காட்சியை படத்திலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்திருக்கிறோம். அதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறோம். தணிக்கைக் குழுவையும் அணுகியுள்ளோம். அவர்கள் அதை பார்த்து முடித்து, படத்திலிருந்து நீக்குவதற்கு 7 முதல் 10 வேலை நாட்களாகும். கண்டிப்பாக நாங்கள் நீக்கிவிடுவோம்.

எங்கள் நோக்கம் யாரையும் இழிவுபடுத்துவதோ அல்லது குறைத்துக் காட்டி அதன் மூலமாக சினிமாவில் லாபமோ, பெயர் புகழ் சம்பாதிப்பதோ அல்ல. அதே போல வடசென்னை 2, 3ஆம் பாகங்களில் அப்பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்னைகளையும் அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளை விவாதிப்பதும் எப்படி அங்குள்ள இளைஞர்கள் அனைத்து நெருக்கடிகளிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்றும் பதிவு செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இப்படத்துடைய பாத்திரப் படைப்புகள், சம்பவங்கள் தனிப்பட்ட நபரையோ, தனிப்பட்ட சமூகத்தையோ புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று வெற்றிமாறன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories