ஜெயக்குமார் ஆடியோவை ரிலிஸ் செய்தா… பொழப்பு நாறிடும்…! எச்சரிக்கும் டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல்!

vetrivel mla - 2026

ஜெயக்குமார் தொடர்பாக என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் நாறிவிடும் என்று எச்சரித்துள்ளார், டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.

வாட்ஸ் அப் மூலம் வைரலாக்கி வரும் சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியான விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறியுள்ளார்.

முன்னதாக, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேரில் குற்றம் சாட்டப் பட்டு ஓர் ஆடியோ வெளியானது. மேலும், டி.ஜெயக்குமார் என்பவருக்கு மகன் பிறந்ததாக பெயரிட்டு, குழந்தை பிறப்பு சான்றிதழ் ஒன்றும், டி.ஜெயக்குமார் என்பவர் பேசுவதாக ஆடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்தார் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல். அப்பொது அவர், பாதிக்கப்பட்டவர்தான் அந்த ஆடியோ உண்மை இல்லை என்று நிரூபிக்க வேண்டும். இவ்விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஜெயக்குமார் சம்பந்தமான வீடியோ, ஆடியோ என்னிடம் உள்ளது. அதை நான் தற்போது வெளியிடப் போவதில்லை. தன் மீது தவறில்லை என்கிற போது, டி.என்.ஏ சோதனை மூலம் தாம் குற்றமற்றவர் என்பதை ஜெயக்குமார் நிரூபிக்க வேண்டும் என்று கூறினார் வெற்றிவேல்.

ஆனால், டி.ஜெயக்குமார், அந்த ஆடியோவில் உள்ள குரல் தனதல்ல என்றும், தன் குரலை டப் செய்து வெளியிட்டவர்கள் மீது தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories