தமிழக காவல் உதவி ஆய்வாளரின் மகளை கடத்திய 3 பேர் கைது : மகள் மீட்பு

 
 
தமிழக காவல் உதவி ஆய்வாளரின் மகளை கடத்திய ருந்துக் கடை உரிமையாளர் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து மகளை மீட்டனர்.
 
சென்னை பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம், தாம்பரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது மகள் கலையரசி (23). மருந்தாளுனர் படிப்பு முடித்து, சேலையூரில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார்.
 
அவர் வியாழக்கிழமை பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
 
மருந்துக் கடையும் பூட்டப்பட்டிருப்பதும், கடைக்கு முன் கலையரசியின் இரு சக்கர வாகனம் கேட்பாறின்றி நிறுத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
 
அப்போது ராமலிங்கத்தின் கைப்பேசிக்கு வந்த அழைப்பில் பேசிய கலையரசி, தன்னை சிலர் வலுக்கட்டாயமாகக் கடத்தி வந்ததாகவும், மதுராந்தகம் அருகே இருப்பதாகவும் கூறியுள்ளார். அதே எண்ணுக்கு ராமலிங்கம் தொடர்பு கொண்டபோது, அந்த கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
 
இதைத் தொடர்ந்து ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் சேலையூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
 
இந்த நிலையில் அவரை கடத்திச் சென்றதாக காவல் துறையினர் மருந்துக் கடை உரிமையாளர் சேகர், அவரது உறவினர்கள் டேவிட், கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
 
கலையரசியின் மருந்தாளுனர் உரிமத்தைப் பயன்படுத்தி மருந்துக் கடை தொடங்கப்பட்டதாகவும், வருவாயைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்னையால் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பரவலாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories