புகழ்பெற்ற உத்தரகோசமங்கை மரகத நடராஜரை கொள்ளை அடிக்க முயற்சி! பக்தர்கள் அதிர்ச்சி!

maragatha natarajar sannidhi temple - 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கையில் புகழ்பெற்ற மரகத நடராஜர் சிலையை திருட முயற்சி நடந்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரகத நடராஜர் சிலையை திருடமுயற்சி செய்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே உள்ளது திருஉத்திரகோசமங்கை. பாடல் பெற்ற தலமான இது மிகப் பழைமையான தலம் என்பதுடன், பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் ஆலயமாகத் திகழ்கிறது. அடர் பச்சை நிறத்தில் திகழும் இங்குள்ள மரகத நடராஜர் விக்ரஹம், மிகவும் பழைமையானது மட்டுமல்ல, அதிசயமான அபூர்வமான விக்ரஹமும் கூட!

பிரதான சிவன், அம்பாள் சந்நிதிக்கு பின்புறத்தில் தனியாக ஒரு கோயில் போன்று திகழும் நடராஜர் சந்நிதியில், நேற்று இரவு பூஜை முடிந்ததும் பூசாரிகள் கோவிலைப் பூட்டிவிட்டு சென்றனர். கோவில் காவல்பணியில் செல்லமுத்து என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, நள்ளிரவில் கோவிலுக்கு வந்த கொள்ளையர்கள் மரகத நடராஜர் சிலையை திருட முயற்சி செய்துள்ளனர்.

சத்தம் கேட்டு வந்த செல்லமுத்துவை அவர்கள் தலையில் அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். கருவறைக்குள் சென்ற கொள்ளையர்கள் விக்ரஹத்தைக் கொள்ளை அடிக்க முயற்சித்த நிலையில், திடீரென அலாரம் அடித்தது. இதனால் பயந்துபோன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

இந் நிலையில், அலாரம் சத்தம் கேட்டு அருகிலிருந்தோர் கோவிலுக்கு ஓடி வந்தனர். அப்போது, பலத்த காயமடைந்து கிடந்த செல்லமுத்துவை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தக் கொள்ளை முயற்சி குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவிலின் பாதுகாப்பு அதிகாரி சுப்பையா என்பவர் மாற்றப்பட்டு, கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டாராம். இந்நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கோயிலில் உள்ள மரகத நடராஜர் விக்ரஹத்துக்கு வருடம் ஒரு முறை மட்டுமே சந்தனக் காப்பு களையப் பட்டு மரகத திருமேனி தரிசனத்துக்கு அனுமதிக்கப் படும். தினமும் நடு உச்சி மதிய நேரத்தில் இங்கே மரகத லிங்கம், மற்றும் ஸ்படிக லிங்கத்துக்கு கோயில் பட்டர்கள் பக்தர்கள் முன்னிலையில் அபிஷேகம் செய்துவைப்பர்!

uthirakosamangai temple security - 2026வயதில் முதியவராயிருந்தாலும், தனி ஒருவராய் நின்று திரு உத்தரகோசமங்கை ஆலயத்தில் மரகத நடராஜரை திருட வந்தவர்களை விரட்டியடித்த இவரை எத்தனை பாராட்டினாலும் தகும்! நம் முன்னோர்கள் அரும்பாடுப்பட்டு அமைத்த ஆலயங்கள், தம் சந்ததியினர் வழிவழியாய் காப்பர் எனும் நம்பிக்கையால்தான். ஆலயத்தை காக்கவும் இயலாமல், இருக்கின்ற விக்ரஹங்களை கொள்ளை அடிக்க விட்டு வேடிக்கை பார்க்கும் அறநிலையத்துறை, ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும். இத்தனை புகழ்பெற்ற ஆலயத்தில் காவலர் ஒருவர்தான் என்பதே வேதனைக்குரியது. பாடல் பெற்ற இன்னும் பல்லாயிரம் ஆலயங்களின் பாதுகாப்பை நினைத்தால் உண்மையில் வருத்தமாக உள்ளது என்று உள்ளம் குமுறுகின்றனர் பக்தர்கள்!

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories