அரசியலில் அனைவரும் நேர்மை, நாகரிகத்தை, பின்பற்ற வேண்டும் : வைகோ

 
சென்னை ராணி சீதை அரங்கில் நேற்று நடைபெற்ற வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன் எழுதிய ‘அண்ணா அருமை அண்ணா’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் அண்ணாவின் மருமகள் விஜயா உள்ளிட்ட உறவினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் இரா.செழியன் தலைமை தாங்கினார். முதல் பிரதியை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட, தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே பெற்றுக் கொண்டார்.
நூல் வெளியீட்டு விழாவில் வைகோ பேசியதாவது:-
தமிழ் குலத்திற்கு உலக அரங்கில் அடையாளம் பெற்றுத்தந்தவர் அண்ணா. அரசியலை தாண்டி தொலைநோக்கோடு அரசியல் நாகரிகம், அரசியல் தீண்டாமை போன்றவற்றுக்கு உதாரணமாகவும் திகழ்ந்தார். அண்ணா பின்பற்றிய அரசியல் நேர்மை, நாகரிகம், எளிமையான வாழ்க்கை தற்போதைய அரசியல்வாதிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். அவருடைய சிந்தனைகளும், செயல்பாடுகளும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும். அவர் குறித்து ஜி.விஸ்வநாதன் எழுதிய புத்தகம் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது. என்று வைகோ பேசினார்.
நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் ஜி.விஸ்வநாதன் பேசியதாவது:-
தமிழகத்துக்கு வெளியே அரசியல் நாகரிகம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லை, அவை மீண்டும் வரவேண்டும். பிறரை மதிக்கும் பெருந்தன்மைக்கு அண்ணா ஒரு முன்உதாரணமாக இருந்தார். தற்போதைய சூழ்நிலையில் பிறநாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா கல்வியில் பின்தங்கி உள்ளது. இந்தியா வளரவில்லை என்று கூறவில்லை, வளர்ச்சி போதாது என்று கூறுகிறேன். தமிழகத்திலும் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவில்லை என்றால் நமக்கு எதிர்காலம் இல்லை. எனவே அரசியல் கட்சிகள் கல்வி மேம்படுவதற்காக அதிக நேரத்தை செலவிட வேண்டும். என்று ஜி.விஸ்வநாதன் பேசினார்.
விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன்,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட பேசினர். கண்ணதாசன் பதிப்பக உரிமையாளர் காந்தி கண்ணதாசன் நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories