‘அம்மா’ பக்தி… அம்மன் பக்தியான விநோதம்…! அதிமுக.,வின் லேட்டஸ்ட் அரசியல்!

Published:

jayalalithaa statue admk office - 2026

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில், மேல்மலையனூர் அங்காளம்மன் பாட்டு பாடி திடீரென பக்திப் பரவசத்தில் பெண்கள் துள்ளிக் குதித்து சாமி ஆடி புதுவித டிரெண்டை உருவாக்கியுள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாரத்தூரில் நடைபெற்ற அ.தி.மு.க. நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், விழுப்புரம் செல்வராஜ் என்ற பேச்சாளர் திடீரென மலையனூரு அங்காளியே என்ற பாடலைப் பாடினார். இதைக் கேட்டு அங்கிருந்த பெண்களில் சிலர் சாமி ஆடி பக்தியை வெளிப்படுத்தினர்.

அந்தப் பாடல் பாடி முடியும் வரையில் பக்திப் பரவசத்தில் பெண்கள் மூழ்கியிருந்ததால், எம்.எல்.ஏ கொடுத்த இலவசப் பொருட்களை ஒவ்வொருவராக மேடைக்குச் சென்று ஆர்ப்பாட்டம் ஆரவாரம் கூச்சல் பரபரப்பு எதுவுமின்றி அமைதியாகச் சென்று, பொருட்களைப் பெற்றனர்.

இந்த டிரெண்ட் பிடித்துப் போனதோ என்னவோ, அல்லது இதே போல் திருவண்ணாமலை மாவட்ட பெண்களை அம்மா பேரைச் சொல்லி அமைதியாக்கி  வைப்பதை விட அம்மன் பாட்டுப் பாடி அமைதியாக்கலாம் என நினைத்தனரோ என்னவோ… புது வித டெக்னிக்கை படித்துக் கொண்டார்கள் அதிமுக.,வினர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

நேற்று அ.தி.மு.க. 47வது ஆண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டம் ஆரணி அருகே பையூர் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, அரசின் சாதனைகளைப் பற்றி பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ் பேசியபோது, அதைக்கேட்டு பெண்கள் கைத்தட்டி சிரித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென என்ன நினைத்தாரோ மேல்மலையனூர் அங்காளம்மன் பக்திப் பாடலை அவர் பாடினார். இதைக் கேட்ட மறுவினாடியே கூட்டத்தில் இருந்த சுமார் 10 பெண்கள் பக்திப் பரவசத்துடன் சாமியாடினர். அ.தி.மு.க. தொடக்கவிழா பொதுக்கூட்டம் , கடைசியில் பக்திக் கூட்டமாக மாறி அமைதியாக நடைபெற்றது!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img