‘அம்மா’ பக்தி… அம்மன் பக்தியான விநோதம்…! அதிமுக.,வின் லேட்டஸ்ட் அரசியல்!

jayalalithaa statue admk office - 2026

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில், மேல்மலையனூர் அங்காளம்மன் பாட்டு பாடி திடீரென பக்திப் பரவசத்தில் பெண்கள் துள்ளிக் குதித்து சாமி ஆடி புதுவித டிரெண்டை உருவாக்கியுள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாரத்தூரில் நடைபெற்ற அ.தி.மு.க. நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், விழுப்புரம் செல்வராஜ் என்ற பேச்சாளர் திடீரென மலையனூரு அங்காளியே என்ற பாடலைப் பாடினார். இதைக் கேட்டு அங்கிருந்த பெண்களில் சிலர் சாமி ஆடி பக்தியை வெளிப்படுத்தினர்.

அந்தப் பாடல் பாடி முடியும் வரையில் பக்திப் பரவசத்தில் பெண்கள் மூழ்கியிருந்ததால், எம்.எல்.ஏ கொடுத்த இலவசப் பொருட்களை ஒவ்வொருவராக மேடைக்குச் சென்று ஆர்ப்பாட்டம் ஆரவாரம் கூச்சல் பரபரப்பு எதுவுமின்றி அமைதியாகச் சென்று, பொருட்களைப் பெற்றனர்.

இந்த டிரெண்ட் பிடித்துப் போனதோ என்னவோ, அல்லது இதே போல் திருவண்ணாமலை மாவட்ட பெண்களை அம்மா பேரைச் சொல்லி அமைதியாக்கி  வைப்பதை விட அம்மன் பாட்டுப் பாடி அமைதியாக்கலாம் என நினைத்தனரோ என்னவோ… புது வித டெக்னிக்கை படித்துக் கொண்டார்கள் அதிமுக.,வினர்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

நேற்று அ.தி.மு.க. 47வது ஆண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டம் ஆரணி அருகே பையூர் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, அரசின் சாதனைகளைப் பற்றி பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ் பேசியபோது, அதைக்கேட்டு பெண்கள் கைத்தட்டி சிரித்துக் கொண்டிருந்தனர்.

திடீரென என்ன நினைத்தாரோ மேல்மலையனூர் அங்காளம்மன் பக்திப் பாடலை அவர் பாடினார். இதைக் கேட்ட மறுவினாடியே கூட்டத்தில் இருந்த சுமார் 10 பெண்கள் பக்திப் பரவசத்துடன் சாமியாடினர். அ.தி.மு.க. தொடக்கவிழா பொதுக்கூட்டம் , கடைசியில் பக்திக் கூட்டமாக மாறி அமைதியாக நடைபெற்றது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories