கற்பழிப்பு குற்றவாளிகளை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லவோ, தூக்கிலிடவோ ஆசை : காவல் ஆணையாளர்

Published:

சட்டம் அனுமதி அளித்தால் கற்பழிப்பு குற்வாளிகளை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்ல ஆசை என்று டெல்லி போலீஸ் காவல் ஆணையாளர் பி.எஸ்.பஸ்சி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : –
பெண்கள் பாதுகாப்பு குறித்து நாங்கள் எப்போதும் கவலைப்படுகிறோம். கற்பழிப்பு உள்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை, சட்டம் அனுமதித்தால், சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுடவோ, தூக்கிலிடவோ விரும்புகிறோம். அத்தகைய அதிகாரத்தை பயன்படுத்த டெல்லி போலீஸ் தயங்காது.
பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்வது நல்லது. அதற்காக நாங்கள் பொறுப்பை தட்டிக்கழிப்பதாக கருதக்கூடாது. பெண்கள் நலனுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவர்களை விட பெண்கள் நலனுக்காக காவல் துறையினர்அதிகமாகவே நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று காவல் ஆணையாளர் பி.எஸ்.பஸ்சி செய்தியாளர்களிடம் கூறினார்.

Related articles

Recent articles

spot_img