உறவு கொண்டாடி ஸ்டாலினை வீழ்த்துவதே வைகோவின் குறிக்கோள்!

bjp arakumar - 2026

மு.க.ஸ்டாலினைஅரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்பதே வை.கோ வின் குறிக்கோள் ! அதற்காக உறவு கொண்டாடி தி.மு.க தலைவர் ஸ்டாலினை வீழ்த்தி விடுவார் என்று கரூரில் பா.ஜ.க துணைத் தலைவர் அரசக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

மேலும், நேற்று விஜயகாந்த் இன்று மு.க.ஸ்டாலின். நாளை யாரோ?  பட்டியல் வருதுல்ல? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் பா.ஜ.க சார்பில் நடைபெற்றது. கரூரில் உள்ள கோவை ரோட்டில் உள்ள பி.எல்.ஏ அமிர்த் இன் ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க மாநிலத் துணை தலைவர் பி.டி.அரசக்குமார் சிறப்புரையாற்றினார். 

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம்   கரூர் மக்களவை உறுப்பினரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை ஆங்காங்கே பா.ஜ.க கட்சியை விமர்சித்தி வருகின்றாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர்,  அது அ.தி.மு.க வின் குரல் அல்ல, தமிழக முதல்வரும், தமிழக துணை முதல்வரும் தான் அ.தி.மு.க வின் வழிகாட்டிகளாக தற்போது உள்ளனர். அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்ஸும்., இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளனர்.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

அவர்கள் இருவரும் பா.ஜ.க வை பாராட்டி வருகின்றனர். பா.ஜ.க ஆட்சியுடன் இணைக்கத்துடன் இருந்து வருகின்றனர். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து சிறப்பான செயல்திட்டங்களை  நடைமுறைப் படுத்தி வருகின்றன.

தம்பித்துரைக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்கின்ற விரக்தியில் பேசி வருகின்றனர். முதலில் தம்பித்துரை மோடியைப் பற்றி பேசியதிலிருந்தே எங்குமே அவரால் தொகுதிக்கு செல்ல முடியவில்லை. மேலும், அவர் முதலில் தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களின் கேள்விக்கு பதில் சொல்லட்டும். பின்னர், பா.ஜ.க வினை கேள்வி கேட்கட்டும்!

மக்கள், தம்பித்துரையை பார்த்து நீ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து என்ன செய்தாய் என்று ஆங்காங்கே கேள்விகேட்டு வரும் நிலையில், முதலில் மக்களின் கேள்விக்கு பதில் சொல்லி விட்டு பின்னர் பா.ஜ.கவுக்கு பதில் சொல்லட்டும்!

மாநிலக் கட்சியாக பா.ஜ.க மாறும் என்று தம்பித்துரை சொல்லி இருக்கின்றார்! நிச்சயமாக மாநிலக் கட்சியாகவும் மாறும்! இந்திய அளவில் ஆங்காங்கே பா.ஜ.க மத்தியிலும் சரி, ஆங்காங்கே அனைத்து இடங்களில் உள்ள மாநிலத்திலும் சரி, பா.ஜ.க இடம் பிடித்து வருகிறது. இந் நிலையில் தமிழகத்திலும் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறி இருப்பார்.  தமிழகத்தில் பாஜக., ஆட்சியைப் பிடிக்கும். தம்பித்துரையின் விரக்தியான உளறல்களுக்கும், விரக்தியான கேள்விகளுக்கும் பா.ஜ.க பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.. என்றார்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாநில அரசு சார்பில் ரூ 15 ஆயிரம் கோடி கேட்கப்பட்ட நிலையில், தற்போது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதலில் இரண்டு கட்டங்களாக இந்த பணிகள் நடைபெற்றுவருகின்றன. பணமாக கேட்கின்றார்கள் அதை கொடுக்க வில்லை என்பதுதான் மக்களுக்கு தெரியும். மின்சாரம் இல்லாத ஊர்களுக்கு மின்சாரம் உருவாக்கி தருவது, தார்ப்பாய் கொடுப்பது என்று துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு முதலில் அந்தந்தத் துறைகளுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படுகின்றது. எனவே, மத்திய குழு பார்வையிட்டதற்கும், தமிழக அரசு கொடுக்கப்பட்ட பாதிப்புப் பணிகளை ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுக்கப்பட்டு அனைத்தும் துறை ரீதியாக செயல்படுத்தப் படுகிறது.. என்றார்.

வை.கோ வின் அரசியல் நிலவரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த போது,  வை.கோ., மு.க.ஸ்டாலினை அரசியலில் இருந்து விரட்டுவது என்பதற்காகத் தான், தற்போது உறவு கொண்டாடி வருகிறார். விரைவில் அழிக்க உள்ளார். முன்பு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தற்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பட்டியல் வருது இல்ல… நேற்று விஜயகாந்த், இன்று மு.க.ஸ்டாலின் நாளை யாரோ.?  என்றார் பாஜக., மாநிலத் துணைத் தலைவர் பி.டி.அரசக்குமார்.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories