வருமான வரி சோதனை!ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திருப்பம்!

02 July16 IT Raid - 2026
File picture

40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை: ரூ.55 கோடி ரொக்கம், ஆவணங்கள் சிக்கின; ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திருப்பம்

ஹவாலா பணம் பரிமாற்றம் தொடர் பாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.54 கோடியே 60 லட்சம் பணம், ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கடந்த மாதம் 30-ம் தேதி மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் திடீரென சோதனை நடத்தினர்.

இதில், 7 கிலோ தங்கம், ரூ.11 கோடியே 16 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை பதுக்கி வைத்திருந்ததாக ஓட்டலில் தங்கியிருந்த 2 வெளிநாட்டினர் உட்பட 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மத்திய வருவாய் பிரிவினர் வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

அதைத் தொடர்ந்து சென்னை தி.நகரில் வசிக்கும் ஸ்ரீநிவாச ரெட்டி என்பவரின் வீடு, அவரது நிறுவனம், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள், அவர்களின் அலுவலகங்கள் என 40 இடங்களில் கடந்த 4 நாட்களாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

பூந்தமல்லியில் உள்ள மதுபான ஆலையிலும் சோதனை நடத்தப் பட்டது.

சோதனை குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறும் போது, “கடந்த 7-ம் தேதி தொடங் கப்பட்ட சோதனை இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

சோதனை யில் இதுவரை ரூ.54 கோடியே 60 லட்சம் பணம், ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், பல ஆவணங்களையும் கைப்பற்றி இருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வரு கிறது.

விசாரணையில் கிடைக்கும் தகவல்களை வைத்தே, ஹவாலா பண மோசடிக்கும் சென்னை தொழில் அதிபருக்கும் உள்ள தொடர்பு குறித்து கூறமுடியும்” என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories