ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை: அலங்காநல்லூரில் போராட்டம்

Published:

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.  மத்திய அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் வரையில் போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதியில்களில் போராட்டம் நடைபெற்று பெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை அடுத்து தென் மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கப்பட வில்லை என்றால் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img