இலங்கையின் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கொழும்புவில் உள்ள காலிமுகத்திடலில் இன்று நடைபெறும் சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படக்கூடாது என எதிர்ப்புகள் வெளியாகியிருக்கும் இந்த நிலையில் இன்றைய நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது அதனை கூச்சலிட்டுக் குழப்புவதற்கு சிலர் தயாராகி வருவதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு உளவுத்துறை தகவல் அளித்துள்ளதை தொடர்ந்து, குழப்பம் விளைவிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்த வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

